பெண்ணிடம் செயினை பறித்த 2 இளைஞர்களுக்கு, தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

 

பெண்ணிடம் செயினை பறித்த 2 இளைஞர்களுக்கு, தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

சென்னை

மாங்காட்டில் பேருந்து நிறுத்ததில் நின்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை, பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தை சேர்ந்தவர் வனஜா(27). இவர் மாங்காடு அடுத்த பரணிபுத்தூரில் உள்ள தனது தாயாரை பார்த்துவிட்டு, வீட்டிற்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் வனஜா கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு தப்பிச்சென்றனர்.

பெண்ணிடம் செயினை பறித்த 2 இளைஞர்களுக்கு, தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

அப்போது வனஜாவின் அலறல் சத்தம்கேட்டு, அந்த பகுதி மக்கள் கொள்ளையர்களை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு துரத்திச்சென்று பிடித்து, தர்மஅடி கொடுத்து மாங்காடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாணையில், அவர்கள் செம்மஞ்சேரியை சேர்ந்த சசி(22) மற்றம் காந்திநகரை சேர்ந்த இளையராஜா(19), என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.