மணப்பாறை : பைக்கில் இருந்து தவறி விழுந்த தாய் மகன் கண் முன்னே உயிரிழந்த பரிதாபம்

 

மணப்பாறை : பைக்கில் இருந்து தவறி விழுந்த தாய் மகன் கண் முன்னே உயிரிழந்த பரிதாபம்

பைக்கில் இருந்து தவறி விழுந்து,  மகன் கண் முன்னே தாய் பேருந்து விபத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் கிளாடியானா ஞானசெல்வி (வயது 47). இவர் கல்லாமேடு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார்.

மணப்பாறை : பைக்கில் இருந்து தவறி விழுந்த தாய் மகன் கண் முன்னே உயிரிழந்த பரிதாபம்

இந்நிலையில் இன்று பணி முடித்து விட்டு மணப்பாறையில் இருந்து ஊருக்கு மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருச்சி சாலை ரெயில்லே மேம்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு வேகத்தடையை கடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் இருந்து கிளாடியானா ஞானசெல்வி தவறி விழுந்தார்.

மணப்பாறை : பைக்கில் இருந்து தவறி விழுந்த தாய் மகன் கண் முன்னே உயிரிழந்த பரிதாபம்

அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் மகன் கண்முன்னே தாய் துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.