“அடப்பாவி !ஏன் ஆம்பள குழந்தை வெறிபிடிச்சி அலையறே? ” பிறந்த பெண் குழந்தையை கொன்ற கணவன் மீது புகாரளித்த மனைவி.

 

“அடப்பாவி !ஏன் ஆம்பள குழந்தை வெறிபிடிச்சி அலையறே? ” பிறந்த பெண் குழந்தையை கொன்ற கணவன் மீது புகாரளித்த மனைவி.

இன்னொரு ஆண் குழந்தை மோகத்தில், ஒரு தந்தை தனக்கு பிறந்த ஒரு பெண் குழந்தையை கொன்ற சம்பவத்தால் அந்த தாய் நிலைகுலைந்துபோயுள்ளார் .
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள நாஸ்லோ கிராமத்தில் வசிக்கும் ஹரிஷ்குமாருக்கும் அவரது மனைவி மீனா தேவி (27) க்கும் ஒரு ஆண் குழந்தையும் ,ஒரு பெண் குழந்தையும் உள்ளது .இந்நிலையில் ஹரிஷுக்கு மீண்டும் இன்னொரு ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டதால் அவரின் மனைவி கர்ப்பமானார் .

“அடப்பாவி !ஏன் ஆம்பள குழந்தை வெறிபிடிச்சி அலையறே? ” பிறந்த பெண் குழந்தையை கொன்ற கணவன் மீது புகாரளித்த மனைவி.
பத்து மாதம் முடிந்து பிரசவ நேரம் வந்ததும் மனைவியை பிரசவத்துக்கு மருத்துவமனையில் சேர்த்தனர் ,அப்போது அவரின் மனைவி மீனா மறுபடியும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் .இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் கணவர் ஹரிஷ் அந்த குழந்தையோடு அந்த பெண் பிரசவ வார்டிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் ,அந்த பிறந்த பெண் குழந்தையை கொலை செய்துள்ளார் .பிறகு சிறிது நேரம் கழித்து அவர் மட்டும் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்து விட்டு வந்துள்ளார் .
இதனால் குழந்தையை இழந்த ஏக்கத்திலிருந்த அந்த தாய், உடனே காவல் நிலையத்திற்கு சென்று தன்னுடைய கணவர் மீது புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அவரின் கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

“அடப்பாவி !ஏன் ஆம்பள குழந்தை வெறிபிடிச்சி அலையறே? ” பிறந்த பெண் குழந்தையை கொன்ற கணவன் மீது புகாரளித்த மனைவி.