மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணின் கையை கிழித்த நபர்; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

 

மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணின் கையை கிழித்த நபர்; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

திருப்பூர் அருகே மருத்துவமனையில் இருந்த பெண்ணின் கையை ஒரு நபர் கத்தியால் கிழித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பகுதியில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த 7ம் தேதி மருத்துவமனைக்கு நுழைந்த நபர் ஒருவர், ரிஷப்ஷனில் நின்று கொண்டிருந்த பெண்ணின் அருகே வந்து கையில் வைத்திருந்த பாட்டிலால் குத்திக் கிழித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணின் கையை கிழித்த நபர்; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

இதனிடையே காயமடைந்த பெண்ணின் உறவினர்கள் அவரை பிடிக்க முயன்ற நிலையில், அந்த நபர் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அங்கிருந்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், அந்த பெண்ணை காயப்படுத்திய காட்சிகள் அனைத்தும் பதிவாகியிருக்கிறது.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபரின் பெயர் மனோகரன் என தெரிய வந்துள்ளது. கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து, மனோகரனை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.