அது இல்லாம இருக்கமுடியல… தனிமை முகாமிலிருந்து தப்பிச் செல்ல முயன்றவருக்கு நேர்ந்த கொடுமை!
Jul 5, 2020, 18:06 IST1593952575000
லக்னோவில் தனிமை முகாமிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ராம்பூர் மாவட்டம் அகப்பூரைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு பூரண தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனால் அவரது மகன்கள் தனியே தங்க வைக்கப்பட்டிருந்தனர்” என்று ராம்பூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிவக்குமார் கூறினார்.
“அவர்களில் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அவரால் தனிமை முகாமில் இருக்க முடியவில்லை. இதன் காரணமாக முகாமில் இருந்து தப்பி செல்ல முயன்ற போது மூன்றாவது தளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்றும் இது தற்கொலையா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.