மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ய மாமனார் முயற்சி !!

 

மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ய மாமனார் முயற்சி !!

ஆந்திர மாநிலம் பாண்ட்ராவாடா கிராமத்தில் மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ய மாமனார் முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆன 20 வயது பெண்ணை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அந்த பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படங்களை காண்பித்துள்ளார். ஆபாசமாகவும் பேசி உள்ளார். இந்த வேதனையை மாமியாரிடம் சொன்னபோது இந்த பிரச்சனையை பெரிதுபடுத்து வேண்டாம் என கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து கணவரிடம் அந்த பெண் தெரிவிக்க அவர் நம்பவில்லை என கூறப்படுகிறது.

மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ய மாமனார் முயற்சி !!

இந்நிலையில் மே 23 அன்று கணவர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாமனார் சிலுமிஷம் செய்ய உடனே மருமகள் அதை செல்போனில் படம் பிடித்தார். மாமனார் மீதான குற்றத்தை நிரூபிக்க செல்போன் ஒன்றே ஆதாரம் என கருதிய மருமகள் மாமனார் அத்துமீறலை தனது செல்போனில் மறைமுகமாக வீடியோ எடுத்தார். பின்னர் அதை காவல்துறையிடம் காண்பித்து புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மாமனார் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இப்போது, இந்த வழக்கில் விசாரணையின் பின்னர், பாதிக்கப்பட்டவரின் மாமனார் மீது காவல்துறை 376 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. தன் மீது புகார் அளித்தவுடன் மாமனார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸ் தேடி வருகிறது.