“சைக்கிள் கேப்ல சக்களத்தியோட ஜல்சா பன்றியே?” -புருஷன் மீது புகாரளித்த பெண்

 

“சைக்கிள் கேப்ல சக்களத்தியோட ஜல்சா பன்றியே?”  -புருஷன் மீது புகாரளித்த பெண்

அம்மா வீட்டிற்கு போய்விட்டு வருவதற்குள் தனக்கொரு சக்களத்தியை கூட்டி வந்த புருஷன் மீது ஒரு மனைவி புகார் கொடுத்துள்ளார் .

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் தரிபுர் பகுதியில் ரிஸ்வான் என்ற கணவணும் நாசியா என்ற மனைவியும் 2012ம் ஆண்டு திருமணமாகி வாழ்ந்து வந்தனர் .அப்போது அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது .அதற்கு பிறகு ஆறு மாதம் மகிழ்ச்சியாக போன அவர்கள் வாழ்க்கையில் புயல் வீசியது ,
அதற்க்கு பிறகு அவர்களின் மாமியாருக்கு அந்த மருமகளை பிடிக்காமல் போனது. அதனால் தினமும் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் அவர்களுக்குள் சண்டை வந்தது .மேலும் அவரின் மாமியார் அந்த மருமகளை அவர்களின் வீட்டில் சென்று இன்னும் நகை பணம் வாங்கி வர சொல்லி கொடுமை படுத்தியுள்ளார் .ஏற்கனவே 1 லட்சம் பெறுமானமுள்ள நகைகளை போட்டுதான் அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார்களாம் .
அதனால் அந்த பெண் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று நகைகள் வாங்க சென்றார் .அங்கு போய் விட்டு வருவதற்குள் அந்த பெண்ணின் கணவனுக்கு அந்த மாமியார் இன்னொரு பெண்ணை பார்த்து மணமுடித்து வைத்துள்ளார் .தாய் வீட்டிற்கு சென்று விட்டு புருஷன் வீட்டிற்குள் நுழைந்த நாசியாவிற்கு தன்னுடைய படுக்கையில் இன்னொரு பெண்ணோடு கணவன் சரசமாடுவதை கண்டு பொறுக்க முடியாமல் பொங்கினார் .அதனால் அவரின் கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து கொண்டு வெளியே அந்த பெண்ணை வெளிய துரத்தினார்கள் .அதனால் அந்த பெண் நாசியா அந்த கணவன் மற்றும் மாமியார் மீது போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்கள்

“சைக்கிள் கேப்ல சக்களத்தியோட ஜல்சா பன்றியே?”  -புருஷன் மீது புகாரளித்த பெண்