பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டார் -மூணு குழந்தையும் தூக்கி ஆற்றில் போட்டார் -கடைசியா அவரும் குதித்தார்.

 

பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டார் -மூணு குழந்தையும் தூக்கி ஆற்றில் போட்டார் -கடைசியா அவரும் குதித்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் எடு கிராமத்தைச் சேர்ந்த 38 வயது கார்த்திகேஷ்வர் என்ற கணவருக்கும் அவரின் மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடக்குமாம் .இப்படி அவர்கள் அடிக்கடி சணடை,போட்டாலும் மூன்று குழந்தைகளை பெற்றுள்ளார்கள் .அந்த குழந்தைகளை பெரிய கான்வென்ட்டில் படிக்க சேர்த்துள்ளார்கள் ,இந்நிலையில் இந்த கொரானாவால் வந்த ஊரடங்கு மற்றும் பொருளாதார இழப்பால் அந்த நபரால் குழந்தைகள் கேட்டதையும், மனைவி கேட்டதையும் வாங்கி கொடுக்க சிரமப்பட்டார் .இதனால் கணவன் மனைவிக்குள் சண்டை அதிகமானது.

பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டார் -மூணு குழந்தையும் தூக்கி ஆற்றில் போட்டார் -கடைசியா அவரும் குதித்தார்.

இதனால் மனமுடைந்த அந்த கணவர் கடந்த ஞாயிற்றுகிழமையன்று தனது மகன்களான கிர்சாகர் (5), நர்மதா (3) மற்றும் எட்டு மாத தேஜ் பிரகாஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் பார்ரா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீரென வண்டியை நிறுத்தி மூன்று குழந்தைகளையும் அங்குள்ள ஆற்றில் தூக்கி வீசிவிட்டு கடைசியா,தானும் அந்த ஆற்றில் குதித்தார் .இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் சொல்லியதும் .போலீசார் விரைந்துவந்து, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஆற்றுக்குள் இருக்கும் அவர்களின் உடல்களை தேடிவருகிறார்கள்

பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டார் -மூணு குழந்தையும் தூக்கி ஆற்றில் போட்டார் -கடைசியா அவரும் குதித்தார்.