அடித்த கணவர் -துடித்த மனைவி -பஞ்சாயத்துக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரருக்கு நேர்ந்த கதி
குடும்ப சண்டையை தடுக்க வந்த வாலிபரை ,பக்கத்து வீட்டுக்காரர் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது
உத்தரபிரதேசத்தின் பரேலியில் நவீன் என்பவர் தன்னுடைய மனைவி தீப் மாலாவுடன் வசித்துவந்தார் .இந்நிலையில் நவீனுக்கு திடீரென வேலை போனது .அதனால் வீட்டிலிருந்த அவர் அடிக்கடி தன்னுடைய மனைவியோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தார் .மேலும் அவரின் மனைவியை தினமும் அடித்து உதைத்து கொடுமை செய்து வந்தார் .
இந்த சண்டை அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அர்ஜுனுக்கு பெரும் தொல்லையாக இருந்தது .அதனால் கடந்த திங்கள் கிழமை வழக்கம் போல அந்த தம்பதிகள் சண்டையிட்டனர் .அப்போது வழக்கம் போல நவீன் அவரின் மனைவியை அடித்து உதைத்தார் .அப்போது குறுக்கே வந்த அந்த அர்ஜுன் தடுத்து நிறுத்த முயன்றார் ,அதனால் மனைவியை அடிக்கும் நவீனை தடுக்க வந்தார் .அப்போது நவீன் அர்ஜுனை அடித்து காயப்படுத்தினார் .
பின்னர் கடுமையான் காயத்துடன் அர்ஜுனை ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டி செல்லாமல் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கூட்டி சென்றனர் .அதன் பிறகு அவர் ஹாஸ்ப்பிட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தார் .பின்னர் போலீசார் அந்த நவீன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர் ..