காதலித்த மகள்-கண்டுபிடித்த தந்தை -அடுத்து வயல்வெளியில் நடந்த விபரீதம்

 

காதலித்த மகள்-கண்டுபிடித்த தந்தை -அடுத்து வயல்வெளியில் நடந்த விபரீதம்

காதலித்த மகளை அவரின் தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது .

காதலித்த மகள்-கண்டுபிடித்த தந்தை -அடுத்து வயல்வெளியில் நடந்த விபரீதம்


உத்திரபிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தின் ராம்பூர் மாவட்டத்தில் ஹர்ஸ்வரூப் என்பவர் தன்னுடைய டீனேஜ் மகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் கைம்ரி காவல் நிலையத்தின் கீழ் உள்ள முஜைனா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் காதல் கொண்டார் .அவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்தது .அதனால் அவர் தன்னுடைய மகளை அவரின் காதலை கை விடுமாறு பலமுறை கூறினார் .
ஆனால் அந்த பெண் தந்தையின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அந்த வாலிபரை காதலித்து அவரோடு போனில் பேசியும் வந்துள்ளார் .அதனால் அவரின் தந்தை அந்த பெண்ணை வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் .ஆனால் அந்த பெண் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை .அதனால் கோபமுற்ற அந்த தந்தை அந்த பெண்ணை அங்குள்ள ஒரு வயல்வெளிக்கு கடந்த வெள்ளிக்கிழமை கூட்டி சென்றார் .பின்னர் அந்தப்பெண்ணை அந்த இடத்திலேயே கழுத்தை நெரித்து கொன்றார் .பிறகு அவரின் சடலத்தை அந்த வயலில் வீசிவிட்டு வந்தார் .பின்னர் பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டு அந்த பெண்ணின் தந்தையை கொலைவழக்கில் கைது செய்தனர்.