“ஆசிட் வீசினா எல்லாம் வெந்துடும் ….” நண்பரிடம் நம்பி பேசிய பெண்ணுக்கு என்னாச்சி தெரியுமா ?

 

“ஆசிட் வீசினா எல்லாம் வெந்துடும் ….” நண்பரிடம் நம்பி பேசிய பெண்ணுக்கு என்னாச்சி தெரியுமா ?


தன்னை கல்யாணம் செய்ய மறுத்த பெண் மீது அசிட் வீசுவதாக மிரட்டியவரை போலீஸ் கைது செய்தது .

“ஆசிட் வீசினா எல்லாம் வெந்துடும் ….” நண்பரிடம் நம்பி பேசிய பெண்ணுக்கு என்னாச்சி தெரியுமா ?


குஜராத்தின் அகமதாபாத்தில் வஸ்ட்ராலைச் சேர்ந்த மிஷால் பாஷோலா என்ற 25 வயதான நபருக்கு அதே பகுதியில் ஒரு நண்பர் இருந்தார் .அந்த நண்பருக்கு அழகான தங்கை இருந்தார் .அந்த பாஷாலேவுக்கு அந்த 21 வயதான பெண் மீது ஆசை .அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் .அதனால் அந்த பாஷாலே தன்னுடைய நண்பரை பார்க்க வருவது போல அடிக்கடி அந்த வீட்டுக்குள் வந்து அந்த பெண்ணிற்கு ரூட்டு போட்டார் .
அப்போதெல்லாம் அந்த பெண் ,தன்னுடைய சகோதரனின் நண்பர் தானே என்று அவரிடம் பேசி பழகி வந்துள்ளார் .ஆனால் அவரின் நோக்கம் வேறாக இருந்தது .பிறகு அந்த பாஷாலே அந்த பெண்ணிடம் போன் நம்பர் வாங்கி, அவருக்கு அடிக்கடி மெஸேஜ் மனுப்பினார் .பிறகு பேஸ் புக்கிலும் அடிக்கடி அவருடன் பேசி வந்தார் .இந்நிலையில் அந்த பாஷாலே அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்து அவரின் ஆபீசிற்கும் வந்துள்ளார் .அங்கு வந்த அவர் அந்த பெண்ணிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லையென்றால் ஆசிட் வீசி உடலை வெந்து விட செய்வதாக மிரட்டினார் .அதனால் அந்த பெண் பயந்து போய் இந்த விஷயத்தை தன்னுடைய சகோதரனிடம் கூறினார் .பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து அங்குள்ள காவல் நிலயத்தில் சென்று அந்த பாஷாலே மீது புகார் கூறினார்கள் .போலீசார் அந்த பாஷாலே மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .