‘ஐ லவ் யூ சொல்லிவிடு ,இல்லேன்னா செத்துவிடு’ -காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியாலும் ,சுத்தியாலும் …ஒரு தலை காதலன் பண்ண தறுதலை வேலை.. ..

 

‘ஐ லவ் யூ சொல்லிவிடு ,இல்லேன்னா செத்துவிடு’ -காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியாலும் ,சுத்தியாலும் …ஒரு தலை காதலன் பண்ண தறுதலை வேலை.. ..

ஒரு தலையாக காதலித்த ஒரு பெண்ணை ,ஒரு வாலிபர் தன்னை அந்த பெண் காதலிக்காத கோபத்தில் கத்தியாலும் ,சுத்தியாலும் தாக்கி கொல்ல முயன்று ,தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கார் பகுதியில் உள்ள ஒரு சொசைட்டியில் 24 வயதான முகமது ஜஹாங்கிர் ஃபாரூக் என்பவர் உதவியாளராக வேலை செய்து வந்தார் .அவர் அதே சொசைட்டியில் வேலை பார்க்கும் 19 வயதுள்ள ஒரு பெண்ணை, ஒரு தலையாக காதலித்தார் .இதனால் அவர் அந்த பெண்ணிடம் தன்னுடைய காதலை அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார் .மேலும் அந்த பெண்ணையும் ஒரு முறை எனக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லிவிடு என்று வற்புறுத்தி வந்தார் .

‘ஐ லவ் யூ சொல்லிவிடு ,இல்லேன்னா செத்துவிடு’ -காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியாலும் ,சுத்தியாலும் …ஒரு தலை காதலன் பண்ண தறுதலை வேலை.. ..
ஆனால் அந்த பெண் தொடர்ந்து ஜஹாங்கீரின் காதலை புறக்கணித்து வந்ததால் ,கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்த பெண்ணை அந்த சொசைட்டியின் மொட்டை மாடிக்கு வரவைத்து மீண்டும் தன்னுடைய காதலை அவரிடம் கூறினார் .ஆனால் மறுபடியும் அந்த பெண் அவரின் காதலை புறக்கணித்ததால் ,அந்த வாலிபர் உடனே ஒரு கத்தியையும் ,சுத்தியையும் எடுத்து அந்த பெண்ணை கடுமையாக தாக்கினார் .கத்திக்குத்து காயத்தாலும் ,சுத்தியல் அடியாலும் கடுமையாக ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த பெண், அந்த நிலையிலும் அவரிடமிருந்து தப்பித்து ஓடினார் .காயத்துடன் தப்பித்து ஓடிய அந்த பெண் அவருக்கு தெரிந்தவர்களை கூட்டி வந்து தன்னை தாக்குவாரோ என்று பயந்த ஜஹாங்கீர் அந்த மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொல்ல முயன்றார் .

‘ஐ லவ் யூ சொல்லிவிடு ,இல்லேன்னா செத்துவிடு’ -காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியாலும் ,சுத்தியாலும் …ஒரு தலை காதலன் பண்ண தறுதலை வேலை.. ..
மாடியிலிருந்து குதித்த அவர் காயமுற்று கிடந்ததை பார்த்த சிலர், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் .பிறகு போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .