“கத்தி கூச்சல் போட்ட சித்தி” -ஒரு புத்தி கெட்ட நபரால் சொந்த சித்திக்கு நேர்ந்த விபரீதம் .

 

“கத்தி கூச்சல் போட்ட சித்தி” -ஒரு புத்தி கெட்ட நபரால் சொந்த சித்திக்கு நேர்ந்த விபரீதம் .

சொத்து தகராறில் தன்னுடைய சித்தியை கொலை செய்த ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்

“கத்தி கூச்சல் போட்ட சித்தி” -ஒரு புத்தி கெட்ட நபரால் சொந்த சித்திக்கு நேர்ந்த விபரீதம் .


ஜார்கண்ட்டில் உள்ள பாகூர் மாவட்டத்தில் பாக்கு அலிகஞ்ச் மொஹல்லாவின் 21 வயதான குண்டன் தாக்கூர் என்ற வாலிபர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அவருக்கும் அவரின்46 வயதான சித்தி புல்குமாரி தேவிக்குமிடையே சொத்து தகராறு பல நாட்களாக இருந்து வந்துள்ளது .அதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி சொத்து பிரச்சினை காரணமாக பல முறை பஞ்சாயத்து நடந்துள்ளது .
இந்நிலையில் இந்த வாரம் அந்த குண்டன் தாக்கூருக்கும் அவரின் சித்தி புல்குமாரி தேவிக்குமிடையே பிரச்சனை வந்துள்ளது .அப்போது அவரின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அங்கு வந்து இந்த சொத்து தகராறு சம்பந்தமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் .
ஆனால் அப்போது அந்த பஞ்சாயத்தில் யாரும் சற்றும் எதிர்பாராவிதமாக அந்த குண்டன் தாக்கூர் ஒரு கத்தியை எடுத்து அவரின் சித்தியை பலமுறை குத்தி காயப்படுத்தி விட்டு ஓடி விட்டார் .அதன் பிறகு அங்கிருந்தவர்கள் அந்த புல்குமாரி தேவியை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி சென்றனர் .ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார் .
பின்னர் போலீசார் வரவைக்கப்பட்டனர் .அவர்கள் இது விஷயமாக தீவிர விசாரணை மேற்கொண்டு புல்குமாரி தேவியை கொலை செய்த அந்த குண்டன் தாக்கூரை கைது செய்து சிறையில் அடைத்தனர்