“விதவிதமா கெடுத்து ,அதை வீடியோ எடுத்து …”15 வருடமா பலாத்காரம் செய்தவருக்கு கத்திக்குத்து

 

“விதவிதமா கெடுத்து ,அதை வீடியோ எடுத்து …”15 வருடமா பலாத்காரம் செய்தவருக்கு  கத்திக்குத்து


15 வருடமாக தன்னுடைய பக்கத்து வீட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை, கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தார்கள்

“விதவிதமா கெடுத்து ,அதை வீடியோ எடுத்து …”15 வருடமா பலாத்காரம் செய்தவருக்கு  கத்திக்குத்து


மத்திய பிரதேசத்தின் குணாவில் அசோக் நகரில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பிரிஜ்பூஷன் சர்மா என்ற நபர் அவரின் பக்கத்து வீட்டில் வசித்த 16 வயது பெண்ணை கடந்த 2005ம் ஆண்டு முதல் பலாத்காரம் செய்துள்ளார் .அப்போது அவர் அந்த பெண்ணை கெடுக்கும் காட்சியை வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்துள்ளார் .அதை ஊடகத்தில் வெளியிடுவதாகக்கூறி விரட்டி விரட்டி கடந்த 15 ஆண்டுகளாக இந்த பெண்ணை பாலியல் கொடுமை செய்துள்ளார் .
பிறகு அந்த பெண்ணுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.பிறகு இரண்டு குழந்தைகளுக்கும் அவர் தாயானார் .அப்போதும் அவர் அந்த பெண்ணை விரட்டுவது தொடர்ந்தது .அவருக்கு திருமணமாகிய பிறகும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவர் அந்த வீடியோவை காமித்து அப்போதும் பலாத்காரம் செய்தார் .சமீபத்தில் அவரின் கணவருக்கு வேறொரு ஊருக்கு வேலை மாற்றலாகி சென்றார் .அதை கேள்விப்பட்ட அந்த நபர் மீண்டும் அவரின் இரண்டு குழந்தைகள் வீட்டிலிருக்கும்போதும் அவர் இப்படி அவரை பாலியல் டார்ச்சர் செய்ய தொடங்கினார் .இதனால் அந்த பெண் அவரை வீட்டு ஹாலில் உட்கார வைத்து விட்டு, வீட்டிலிருந்து கிட்சனுக்குள் சென்று காய் வெட்டும் கத்தியை கொண்டு வந்து அவரை 25 முறைக்கு மேல் அந்த கத்தியால் குத்தி கொலை செய்தார் .


இந்த கொடூர சம்பவம் பற்றி கேள்விப்பட்ட போலீசார் , விசாரணை நடத்தி அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.