“துண்டிக்கப்பட்ட தலை ” : கடலூரில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

 

“துண்டிக்கப்பட்ட தலை ” : கடலூரில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

பண்ருட்டி அருகே என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“துண்டிக்கப்பட்ட தலை ” : கடலூரில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

இந்நிலையில் கடலூர் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மலட்டாறு பகுதியில் கிருஷ்ணா என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரா என்பவரை கழுத்தறுத்து கொன்று விட்டு தப்பிய கிருஷ்ணாவை போலீசார் பிடிக்க முயன்று உள்ளனர். பிடிக்க முயன்ற போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதால் என்கவுன்ட்டரில் கிருஷ்ணா சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணா உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

“துண்டிக்கப்பட்ட தலை ” : கடலூரில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

முன்பகை காரணமாக கிருஷ்ணா தரப்பால் கடலூரைச் சேர்ந்த ரவுடி வீரா நேற்று தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனால் வீரா கொலை வழக்கில் பண்ரூட்டியை அடுத்த குடிமியான்குப்பம் பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணாவை கைது செய்ய சென்றனர். அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் போலீஸ் எஸ்.ஐ. ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதனால் என்கவுன்ட்டர் நடந்ததாகவும் தெரிகிறது. கொல்லப்பட்ட வீராவின் தலையை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.