அடிக்கடி லைனில் கிராஸ் ஆன மாமியார்… துப்பாக்கியால் பதில் சொன்ன மருமகன்!

 

அடிக்கடி லைனில் கிராஸ் ஆன மாமியார்… துப்பாக்கியால் பதில் சொன்ன மருமகன்!

42 வயதான ஒருவர் தனது சொந்த விவகாரத்தில் அடிக்கடி தலையிட்டு வந்த மாமியார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை அகமதாபாத்தில் உள்ள மணிநகர் பகுதியில் உள்ள அந்த நபரின் மனைவி வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் பெயர் ஆஷிஷ் தேசாய். செவ்வாய்க்கிழமை இரவு, ஆஷிஷின் பிறந்த நாள் என்பதால், தனது மாமியார் வீட்டில் இருந்த மனைவி வர்ஷாவுக்கு போன் செய்துள்ளார். வர்ஷா அவரது அழைப்பு பதிலளிக்கவில்லை. அவரது மாமியார் ராஜ்ராணி தேசாய் தான் வர்ஷாவை போனை எடுக்க விடாமல் தடுத்திருக்க வேன்டும் என்று முடிவு செய்த ஆஷிஷ் கோபமடைந்துள்ளார்.

அடிக்கடி லைனில் கிராஸ் ஆன மாமியார்… துப்பாக்கியால் பதில் சொன்ன மருமகன்!

பின்னர் தனது மாமியார் வீட்டிற்குச் சென்ற ஆஷிஷ் அவரை தான் வைத்திருந்த லைசென்சுடு துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுள்ளார். புல்லட் முழங்கையில் பட்டுள்ளதால் உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஷிஷ் மற்றும் வர்ஷா இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். அப்படி சண்டையிட்டு 25 நாட்களுக்கு முன்னர் வர்ஷா அவரது அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார். தனது மாமியார் தனது வாழ்க்கையில் அடிக்கடி தலையிடுகிறார் என்றுணர்ந்த ஆஷிஷ் அவரைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்” என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.