பேத்தியின் தோழியான சிறுமியை பாலியல் வேட்டையாடிய நபர் கைது!

 

பேத்தியின் தோழியான சிறுமியை பாலியல் வேட்டையாடிய நபர் கைது!

போக்ஸோ போன்று எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகின்றன. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வாழ்வாதரம் இல்லாமல் மக்கள் அல்லாடும் இந்த நேரத்திலும் நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

மதுரையில் 58 வயது நபர் மைனர் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எஸ் ஜகாங்கீர் என்ற நபர் மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு அருகில் வசித்து வருகிறார். போலீஸ் தகவலின் படி, பாதிக்கப்பட்ட சிறுமி அந்த நபரின் பேத்தியின் தோழி தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேத்தியின் தோழியான சிறுமியை பாலியல் வேட்டையாடிய நபர் கைது!

கடந்த வாரம், ஜகாங்கீர் சிறுமியை தன் பேத்தியைப் பார்க்க அழைத்துச் செல்வதாகக் கூறி கூட்டிச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் அந்தச் சிறுமியை அவள் வீட்டில் விட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்தச் சிறுமி வீட்டில் தெரிவிக்காததால் இந்த பாலியல் வன்கொடுமை பலமுறை நடந்துள்ளது. இறுதியாக சிறுமி தனக்கு வலி ஏற்படுவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார், பின்னர் தான் இந்தச் சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் உடனே அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.