“என் மகன் வெளியே போய்ட்டான் ,நான் உள்ளே வரலாமா?” -மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரின் கதி.

 

“என் மகன் வெளியே போய்ட்டான் ,நான் உள்ளே வரலாமா?” -மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரின் கதி.


தனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தன்னுடைய தந்தையை, கூலிப்படை மூலம் கொன்ற மகனை போலீசார் கைது செய்தார்கள் .

“என் மகன் வெளியே போய்ட்டான் ,நான் உள்ளே வரலாமா?” -மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரின் கதி.


உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் ஆதர்ஷ் மண்டி பகுதியில் முண்டெட் கலான் கிராமத்தில் 28 வயதான அமித் என்பவர் தன்னுடைய மனைவியோடு வசித்து வந்தார் .அவருடன் 45 வயதான பவன் என்ற அவரின் தந்தையும் வசித்து வந்தார் .இந்நிலையில் அவரின் தந்தைக்கு அவரின் மருமகள் மீது ஆசை பிறந்துள்ளது .அதனால் அவரை அடைய அவர் பலவகையில் வீட்டுக்குள்ளேயே திட்டமிட்டார் .அதனால் தன்னுடைய மகன் அமித் வெளியே போயிருந்த சமயமெல்லாம் அவரின் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .
அந்த மாமனாரின் பாலியல் தொல்லை குறித்து அவரின் மருமகள் அவரின் மகனிடம் பலமுறை கூறினார் .இதனால் கோபப்பட்ட அவரின் மகன் அதே பகுதியிலிருக்கும் சில கூலிப்படையை சேர்ந்தவர்களிடம் 2 லட்ச ரூபாய் கொடுத்து, தன்னுடைய தந்தையை கொலை செய்ய சொன்னார் .இதனால் கடந்த வாரம் ஒரு நாள் இரவு 10 மணியளவில் கோஹர்னி சாலையில் உள்ள தனது வயல்களுக்கு சென்று கொண்டிருந்த பவனை அந்த கூலிப்படையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் . பின்னர் அவரின் தந்தை பவனின் உடல் ஷாம்லிபோலிஸில் உள்ள அவரின் வயலில் ரத்தக் வெள்ளத்தில் வீசப்பட்டது .மறுநாள் அவரின் சடலத்தை பார்த்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்கள் .போலீசார் விரைந்து வந்து அவரின் கொலை பற்றி விசாரித்தார்கள் .அப்போது அவரின் மகனே ,தன்னுடைய மனைவிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தால் அவரை கூலிப்படையை விட்டு கொன்றதை கண்டறிந்தனர் . பின்பு அவரின் மகன் அமித் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

“என் மகன் வெளியே போய்ட்டான் ,நான் உள்ளே வரலாமா?” -மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரின் கதி.