மனைவி உடனான குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைத்த தந்தைக்கு சரமாரி அடி ! மகன் மீது தந்தை போலீசில் புகார் !!

 

மனைவி உடனான குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைத்த தந்தைக்கு சரமாரி அடி ! மகன் மீது தந்தை போலீசில் புகார் !!

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே அம்பாவாடி பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் மகன் மீதே போலிசில் புகார் அளித்துள்ளார். தனது மனைவியுடன் சண்டையிட்டதற்காக தன்னை செங்கல்லால் தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார்.
அம்பாவாடியில் உள்ள ஸ்ரேயாஸ் டெக்ரா அருகே ராஜீவ்நகரில் வசித்து வருகிறார் ராம்ஜி மொராடியா. குற்றம் சாட்டப்பட்ட அவரது மகன் திலீப் வீட்டின் தரை தளத்தில் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த திங்களன்று ராம்ஜி வீட்டில் இருந்தபோது மகன் திலீப் தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதற்காக ராம்ஜி திலிப்பிடம் சென்று, அற்ப விஷயங்களுக்காக மனைவியுடன் சண்டையிட வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்

மனைவி உடனான குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைத்த தந்தைக்கு சரமாரி அடி ! மகன் மீது தந்தை போலீசில் புகார் !!இதனால் ஆத்திரம் அடைந்த திலீப் தனது தந்தையை திட்டி அவருடன் சண்டையிடத் தொடங்கினார். பின்னர் ராம்ஜியின் நெற்றியில் அடிக்க ஒரு செங்கலை எடுத்தார். மகன் தந்தையைத் தாக்குவதைப் பார்த்த ராம்ஜியின் மனைவி தாஹி அங்கு விரைந்து வந்து ராம்ஜியை மீட்டார்.
ராம்ஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின்னர் தந்தையை மிரட்டிவிட்டு திலீப் தப்பி ஓடிவிட்டார். ராம்ஜியின் மூத்த மகன் பிரகாஷ் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.