“ரெண்டாவது புருஷனும் என்னை பெண்டு நிமித்துறானே” -கோவப்பட்ட பெண்ணுக்கு ரயிலில் நடந்த விபரீதம்

 

“ரெண்டாவது புருஷனும் என்னை பெண்டு நிமித்துறானே” -கோவப்பட்ட பெண்ணுக்கு ரயிலில் நடந்த விபரீதம்


ஒரு பெண்ணின் ரெண்டாவது கணவன், ரயிலிலிருந்து தூக்கி வீசி அவரின் மனைவியை கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“ரெண்டாவது புருஷனும் என்னை பெண்டு நிமித்துறானே” -கோவப்பட்ட பெண்ணுக்கு ரயிலில் நடந்த விபரீதம்


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் ஒரு 26 வயதான பெண் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறார் .அவர் அங்கு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு ஏழு வயதான ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்தார் .இதற்கிடையே அந்த பெண்ணுக்கும் அவரின் கணவருக்கும் அடிக்கடி தகராறு வந்ததால் அந்த பெண் தன்னுடைய ஏழு வயதான மகளோடு தனியே பிரிந்து வந்து விட்டார் .அதன்பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னோடு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் .
அந்த பெண்னின் இரண்டாவது திருமணத்திற்கு பிறகும், அந்த கணவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது .இதனால் அந்த பெண் இவரும் அந்த முதல் கணவனை போலவே கொடுமைபடுத்துறாரே என்று புலம்பியபடி இருந்தார் .
இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த திங்கள் கிழமை ரயிலில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள் .அப்போது செம்பூர் மற்றும் கோவண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் போகும்போது இருவருக்கும் மீண்டும் தகராறு வந்துள்ளது .அப்போது கோபப்பட்ட அந்த கணவர்,அந்த மனைவியை ரயிலில் இருந்து தூக்கி வீசினார் .அவர் தூக்கி வீசியதில் அந்த மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார் .பிறகு ரயில்வே போலீசார் அவரின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்கள் .அப்போது அந்த பெண்ணின் இரண்டாவது கணவர், குடும்ப தகராறில் ரயிலில் இருந்து அந்த பெண்ணை தூக்கி எரிந்து கொன்றதை கண்டறிந்து அவரை கைது செய்தார்கள் .

“ரெண்டாவது புருஷனும் என்னை பெண்டு நிமித்துறானே” -கோவப்பட்ட பெண்ணுக்கு ரயிலில் நடந்த விபரீதம்