“ஊரிலிருந்து வருவார் ,உல்லாசமாக இருப்பார் ” -ராணுவ வீரர்னு பெண்ணை ராப்பகலா வேட்டையாடிய நபர்.

 

“ஊரிலிருந்து வருவார் ,உல்லாசமாக இருப்பார் ” -ராணுவ வீரர்னு பெண்ணை ராப்பகலா வேட்டையாடிய நபர்.

ஊடகத்தில் தான் ராணுவத்தில் உயரதிகாரியாக இருப்பதாக பொய் சொன்ன நபரிடம், ஒரு பெண் தன்னையும் இழந்து பணத்தையும் இழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது .


மும்பையின் போவாய் பகுதியில் வசிக்கும் 29 வயதான ஒரு பெண் அடிக்கடி சமூக ஊடகத்தில் பலரோடு நட்பு கொண்டு பேசுவார் .இந்நிலையில் அவரோடு 40 வயதான கரண் ஷெட்டி என்பவர் தான் ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருப்பதாக கூறி நட்பு கொண்டார் .அதனை உண்மையென நம்பிய அந்த பெண் அவரோடு அடிக்கடி அரட்டையடித்து வந்துள்ளார் .சில நாட்களுக்கு பிறகு அவர்களின் நட்பு காதலாக மாறியது .
அதன்பிறகு அவர் ராணுவத்திலிருந்து வருவதாக பொய் சொல்லி அடிக்கடி அந்த பெண்ணை சந்திக்க வருவார் .அப்போதெல்லாம் அந்தபெண் தன்னை அவருக்கு தருவார் . பின்னர் அவர் அந்த பெண்ணிடம் பணத்தையும் வாங்கி கொண்டு செல்வார் .
அந்த பெண் அந்த பணத்தை அவரிடம் கேட்ட போது விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் .அதை உண்மையென நம்பிய அந்த பெண் தன்னையும் கொடுத்து ,பணத்தையும் கொடுத்துள்ளார் .இப்படி கடந்த மாதங்களில் கிட்டத்தட்ட 13 லட்ச ரூபாய் பணத்தை அந்த பெண்ணிடமிருந்து அவர் ஆட்டைய போட்டுள்ளார் .
ஒரு நாள் அந்த பெண் அவர் சொன்ன ரானுவ முகாமுக்கு சென்று விசாரித்த போது கரண் ஷெட்டி ராணுவத்தில் பணியாற்றவில்லை என்ற உண்மை அவருக்கு தெரிய வந்தது .அதனால் தான் மிகவும் ஏமாற்றப்பட்டதையுணர்ந்த அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்

“ஊரிலிருந்து வருவார் ,உல்லாசமாக இருப்பார் ” -ராணுவ வீரர்னு பெண்ணை ராப்பகலா வேட்டையாடிய நபர்.