மனைவியோடு பழகிய ஆண் -பணம் பறிக்க நினைத்த கணவன்-அடுத்து செஞ்ச வேலைய பாருங்க.

 

மனைவியோடு பழகிய ஆண் -பணம் பறிக்க நினைத்த கணவன்-அடுத்து செஞ்ச வேலைய பாருங்க.


மனைவியோடு பழகிய நபரை மிரட்டி பணம் கேட்ட கணவரை போலீசார் கைது செய்தனர் .
மும்பையின் பிவாண்டியில் வசிக்கும் துஷார் ஷில்வந்த்,என்பவரின் மனைவி அங்குள்ள பியூட்டி பார்லரில் வேலை பார்க்கிறார் .இதனால் அந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது .அதனால் அந்த பெண் அவரின் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் .இந்நிலையில் அந்த பெண்ணோடு அந்த பார்லருக்கு வரும் கஸ்டமர் ஒருவர் பழகியுள்ளார் .அதை தெரிந்து கொண்ட அந்த பெண்னின் கணவர் துஷார் அந்த கஸ்டமரிடம் பணம் பறிக்க ஒரு திட்டம் போட்டார் .

மனைவியோடு பழகிய ஆண் -பணம் பறிக்க நினைத்த கணவன்-அடுத்து செஞ்ச வேலைய பாருங்க.


அதன் படி துஷார் அந்த கஸ்டமரின் நம்பருக்கு போன் செய்தார் .அப்போது அவரிடம் தான் ஒரு போலீஸ் அதிகாரியென்று கூறினார் .அவர் மேலும் அந்த நபரிடம் தாங்கள் ஒரு பியூட்டி பார்லர் பெண்ணிடம் கள்ள உறவு வைத்திருப்பதை பற்றி தனக்கு தெரியுமென்றும் ,இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமலிருக்க 10 லட்ச ரூபாய் பணம் தர வேண்டுமென்று மிரட்டினார் .
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபருக்கு ,அவர் மீது சந்தேகம் வந்தது .அதனால் அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த துஷார் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர் கொடுத்த போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசினர் .பின்னர் அதன் மூலம் ட்ரேஸ் செய்து துஷாரை கைது செய்தனர் .
இது பற்றி போலீசார் கூறுகையில் “நாங்கள் பொறி வைத்து துஷாரை கைது செய்தோம். இந்த வழக்கில் அவரது மனைவிக்கு பங்கு இருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம், ”என்று கூறினார்கள் .

மனைவியோடு பழகிய ஆண் -பணம் பறிக்க நினைத்த கணவன்-அடுத்து செஞ்ச வேலைய பாருங்க.