“பூக்கடையா இருந்த பொண்டாட்டிய சாக்கடையில் வீசிட்டியே” -சந்தேகத்தால் வந்த வினை.

 

“பூக்கடையா இருந்த பொண்டாட்டிய  சாக்கடையில் வீசிட்டியே” -சந்தேகத்தால் வந்த வினை.

ஒரு குடிகார கணவர் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் மகளை கொன்று சாக்கடையில் வீசிய சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

“பூக்கடையா இருந்த பொண்டாட்டிய  சாக்கடையில் வீசிட்டியே” -சந்தேகத்தால் வந்த வினை.

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் அருகேயுள்ள காந்திதத்தில் சஞ்சய் சிங் ஓஜா என்பவர் தனது மனைவி சிம்ரான் மற்றும் மகள்  சோனியாவுடனும் ,வளர்ப்பு மகள்  ரேஷ்மா உடனும்  வசித்து வந்தார் .இந்நிலையில் சஞ்சய்க்கு அவரின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்துள்ளது .அதனால் அடிக்கடி அவருடன் குடித்து விட்டு வந்து சண்டை போட்டுள்ளார் .

இந்த குடிப்பழக்கம் நாளடைவில் அவருக்கு அதிகமாகியுள்ளது .அதே நேரத்தில் மனைவியின் மீதும் சந்தேகம் அதிகமாகியுள்ளது. அதனால் இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது .மேலும் அவரின் மகளும் தந்தையின் செய்கையால் பாதிக்கப்பட்டு அவரை கண்டபடி திட்டியுள்ளார் .அதன் படி கடந்த வாரம் ஒருநாள் இரவு நன்றாக வயிறு முட்ட குடித்து விட்டு வந்த அந்த சஞ்சய்அவரின் மனைவி மற்றும் மகளை ஷாப்பிங் போகலாம் என்று கூறி வெளியே கூட்டி சென்றார் .அதன் பிறகு அவர் அவர்களிருவரையும் ஒரு காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார் .அங்கு வைத்து அவர் மனைவி மற்றும் மகளை கொன்றுள்ளார் .பின்னர் இறந்த இருவரின் உடலை என்ன செய்வது என்று யோசித்தார்

அதன் பிறகு இறந்தவர்களின் உடலை காண்ட்லா துறைமுகத்தால் கட்டப்பட்ட சாக்கடை  குழாயில் ஓஜா அந்த உடல்களை கொட்டினார்.அதன் பிறகு தன்னுடைய தாயார் மற்றும் சகோதரியை காணாத அவரின் வளர்ப்பு மகள் பக்கத்து வீட்டிலிருப்பவர்களிடம் இதுபற்றி கூறினார் .அவர்கள் சஞ்சய் மீது சந்தேகப்பட்டு போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் சஞ்சய் மீது வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவர் இருவரையும் கொன்றதை ஒப்புக்கொண்டார் .அதன் பிறகு  இருவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

“பூக்கடையா இருந்த பொண்டாட்டிய  சாக்கடையில் வீசிட்டியே” -சந்தேகத்தால் வந்த வினை.