“ஜட்டி போட்டதுக்காக வெட்டி போட்டுட்டானே” -இரு நண்பர்களுக்குள் நடந்த மோதல்.

 

“ஜட்டி போட்டதுக்காக வெட்டி போட்டுட்டானே” -இரு நண்பர்களுக்குள் நடந்த மோதல்.

ஒரு  ரூம் நண்பரின்  ஜட்டியை இன்னொருவர் அணிந்து கொண்டதால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை இன்னொருவர் குத்தி கொன்றார் .

“ஜட்டி போட்டதுக்காக வெட்டி போட்டுட்டானே” -இரு நண்பர்களுக்குள் நடந்த மோதல்.

உத்தரபிரதேசத்தில் உள்ள பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் குமார் என்பவரும் , பஹ்ரைச்சைச் சேர்ந்த விவேக் சுக்லா என்பவரும்  – கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில்  தொழிலாளர்களாக பணியாற்றினார்கள் . இந்த இருவரும் -அந்த  தொழிற்சாலையின் வளாகத்தில் ஒரே அறையில் வசித்து வந்தனர்.இந்நிலையில் குமாரின் ஜட்டியை அவரின் ரூம் நண்பர் சுக்லா எடுத்து அணிந்து கொண்டுள்ளார் .அதனால் குமார் தன்னுடைய ஜட்டியை அரை முழுவதும் தேடிய போது அதை சுக்லா எடுத்து அணிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார் .

அதனால் இருவருக்குள் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது .அந்த வாக்கு வாதத்தின் முடிவில் குமார் அங்கிருந்த காய் கறி வெட்டும் கத்தியை எடுத்து அவரின் தோழர் சுக்லாவை வெட்டி தள்ளினார் .இந்த தாக்குதலால் அந்த அறைக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுக்லாவை அந்த அறையின் பக்கத்து அறையில் வசிக்கும் நண்பர்கள்  அவரை  கான்பூரில் உள்ள லாலா லஜ்பத் ராய்  மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார் .

இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .பிறகு போலீசார் அந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த குற்றவாளி குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டார்கள்.பின்னர் அந்த  தொழிற்சாலையில் பணிபுரியும் மற்ற தொழிலாளர்களிடம் விசாரித்துவிட்டு, குமாரை பிடிக்க தனி போலீஸ் குழு அமைக்கப்பட்டது .

“ஜட்டி போட்டதுக்காக வெட்டி போட்டுட்டானே” -இரு நண்பர்களுக்குள் நடந்த மோதல்.