நாயை திட்டியதால் முன்விரோதம்; திருச்செந்தூர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை!

 

நாயை திட்டியதால் முன்விரோதம்; திருச்செந்தூர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை!

திருச்செந்தூர் அருகே வளர்ப்பு நாயை திட்டிய நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர் பால் லிங்கம். இவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நாயை அதே பகுதியை சேர்ந்த லிங்கராஜ் என்பவர், நாயே எனத் திட்டியதோடு கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பால் லிங்கம், லிங்கராஜுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

நாயை திட்டியதால் முன்விரோதம்; திருச்செந்தூர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை!

இந்த சம்பவத்தில் இருந்த பால் லிங்கத்துக்கும் லிங்கராஜுக்கும் அடிக்கடி சண்டை நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், பால் லிங்கத்தை லிங்கராஜ் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த பால் லிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், தாமாக முன்வந்து சரண் அடைந்த லிங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.