“எனக்கு உடலை கொடு ,நண்பனுக்கு மனசை கொடு ” -நண்பனின் காதலி மீது மோகம் கொண்டவருக்கு நேர்ந்த கதி

 

“எனக்கு உடலை கொடு ,நண்பனுக்கு மனசை கொடு ” -நண்பனின் காதலி மீது மோகம் கொண்டவருக்கு நேர்ந்த கதி

தன்னுடைய நண்பனின் காதலியை உறவுக்கு அழைத்ததால், அவரை அவரின் நண்பர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“எனக்கு உடலை கொடு ,நண்பனுக்கு மனசை கொடு ” -நண்பனின் காதலி மீது மோகம் கொண்டவருக்கு நேர்ந்த கதி

உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் வசிக்கும் தீபக் சைனி என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .இந்த விஷயம் அவரின் நண்பர் அபிஷேக்கு தெரிந்தது . அவருக்கும் அந்த பெண் மீது ஆசை இருந்துள்ளது .ஆனால் அந்த பெண் தீபக்கை காதலித்து வந்தார் .அதனால் கோபம் கொண்ட அபிஷேக் அந்த பெண்ணை அடைய ஒரு திட்டம் தீட்டினார் .
அதன் படி அந்த பெண் தன்னுடைய காதலன் தீபக்கோடு நெருக்கமாக இருக்கும் ஒரு போட்டோவை அவர்களுக்கு தெரியாமல் எடுத்தார் .அதன் பிறகு அந்த போட்டோவை அந்த பெண்ணிடம் காண்பித்து அதை அவரின் பெற்றோரிடம் காண்பித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார் .அதனால் அந்த போட்டோவை அவர்களிடம் காண்பிக்காமலிருக்க தன்னோடு ஒரு நாள் உறவுக்கு வரவேண்டுமென ப்ளாக் மெயில் செய்தார் .இந்த விஷயத்தை அந்த பெண் தன்னுடைய காதலன் தீபக்கிடம் கூறியதும் அவர் அபிஷேக்கை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.
அவரின் திட்டபடி தீபக்கும் அவரது நண்பர் அங்கித் குமார் இருவரும் அபிஷேக்கை ஒரு வயல்வெளிக்கு வரவைத்தார்கள் .பிறகு இருவரும் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்கள் .அதை குடித்து அவர் மயங்கியதும் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளார்கள் .பிறகு போலீசுக்கு இறந்த அபிஷேக்கின் தந்தை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் விசாரணை நடத்தி அவரை கொலை செய்த அவரின் நணபர்கள் தீபக் மற்றும் அங்கித் ஆகியோரை கைது செய்தார்கள்.

“எனக்கு உடலை கொடு ,நண்பனுக்கு மனசை கொடு ” -நண்பனின் காதலி மீது மோகம் கொண்டவருக்கு நேர்ந்த கதி