ஆட்டோவிலேயே அடுத்தவனோடு உல்லாசம் கொண்ட மனைவி -பார்த்த கணவனுக்கு நேர்ந்த கதி

 

ஆட்டோவிலேயே அடுத்தவனோடு உல்லாசம் கொண்ட மனைவி -பார்த்த கணவனுக்கு நேர்ந்த கதி


மனைவியின் கள்ள காதலை கண்டித்த கணவனை ,அந்த பெண்ணும் அவரின் காதலனும் சேர்ந்து கொலை செய்து வீசிய சம்பவம் நடந்துள்ளது

ஆட்டோவிலேயே அடுத்தவனோடு உல்லாசம் கொண்ட மனைவி -பார்த்த கணவனுக்கு நேர்ந்த கதி


மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் மன்படகானில் 30 வயதான பிரவீன் பாட்டில் ,தன்னுடைய 22 வயதான மனைவி லக்ஷ்மி பாட்டீலோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் லஷ்மி ஒரு ஆட்டோ ட்ரைவராக வேலை பார்த்து வருகிறார் .அவருக்கு சன்னி சாகர் மற்றும் அரவிந்த் ஆகிய இரு வாலிபர்களுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது .அவர்கள் ஆட்டோவிலேயே உல்லாசமாக இருந்தனர் .இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவர் பிரவீன் பாட்டிலுக்கு தெரியவே அவரை அந்த நபர் கண்டித்தார் .
அதனால் லஷ்மி தன்னுடைய கணவரை அவரின் காதலனோடு சேர்ந்து தீர்த்து கட்ட முடிவெடுத்தார் .
பிறகு ஜூன் 4 ம் தேதி தனது கணவர் பிரவீன் பாட்டீல் தூங்கும்போது அந்த பெண் அவரின் காதலன் அரவிந்தோடு சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தார் .பிறகு அவரின் உடலை அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்றனர் .பின்னர் அவரே போலீசில் தன்னுடைய கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்தார் .மறுநாள் அந்த பகுதி மக்கள் ப்ரவீனுடைய உடல் குப்பை தொட்டியில் அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்து போலீசில் புகார் கொடுத்தனர் .பின்னர் போலீசார் வழக்கு பதிந்து அந்த ப்ரவீனுடைய பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தார்கள் .அப்போது அவரை அவரின் மனைவியும் ,காதலனும் சேர்ந்து கொலை செய்ததை கண்டு பிடித்தனர் .பின்னர் அந்த லஷ்மி மற்றும் அரவிந்தை கைது செய்தனர்