“ரெண்டும் பொண்ணு ,மனசெல்லாம் புண்ணு” பெண் குழந்தைகளை கொல்ல முயன்ற தந்தை ..சிசிடிவி யில் சிக்கினார்.

 

“ரெண்டும் பொண்ணு ,மனசெல்லாம் புண்ணு” பெண் குழந்தைகளை கொல்ல முயன்ற தந்தை ..சிசிடிவி யில் சிக்கினார்.

ஆண் குழந்தை பிறக்காத ஏக்கத்தில் தனக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளை ஒரு தந்தை பாலில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

“ரெண்டும் பொண்ணு ,மனசெல்லாம் புண்ணு” பெண் குழந்தைகளை கொல்ல முயன்ற தந்தை ..சிசிடிவி யில் சிக்கினார்.

தெலுங்கானாவில் மெஹபூப்நகரில் தேசப்பள்ளி கிராமத்தில் கேசவலு என்பவர் கிருஷ்ணவேணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .ஆனால் கல்யாணமாகி நீண்ட நாட்களாக அவர்களுக்கு குழந்தையில்லாததால் கோவில் கோவிலாக போய் ,ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற்றதும் அந்த பெண் கர்ப்பமானார் .உடனே கேசவலு தன் மனைவி கர்ப்பமானதும் சந்தோஷப்பட்டார் .
பிறகு அந்த மனைவிக்கு செப்டம்பர் மாதம் 1ம் தேதி பிரசவ வலியெடுத்து ஹாஸ்பிடலில் சேர்த்ததும் அவர் மனைவி இரண்டு அழகான பெண் குழந்தைகளை பெற்றார் .உடனே கேசவலு தன் இரண்டு பெண் குழந்தைகளை பார்த்ததும் சந்தோஷப்படாமல் வேதனைப்பட்டார் .அவர் இரண்டும் பெண் குழந்தையாக பிறந்து விட்டதே என்ற வேதனையில் பாலில் பூச்சி மருந்தை கலந்து அந்த குழந்தைகளுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றார் .
நல்லவேலையாக அந்த நேரத்தில் அந்த குழந்தையினை குளிப்பாட்ட நர்ஸ் அப்போது அங்கே வந்தபோது அந்த குழந்தைகள் தப்பித்தது .ஆனால் அவர் பாலில் விஷம் கலக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் சிக்கியது .இதனால் அந்த காட்சியை பார்த்த மருத்துவமனை நிர்வாகிகள் அவரை போலீசில் பிடித்து கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .

“ரெண்டும் பொண்ணு ,மனசெல்லாம் புண்ணு” பெண் குழந்தைகளை கொல்ல முயன்ற தந்தை ..சிசிடிவி யில் சிக்கினார்.