இளநீர் கடைப் பெண்ணை நூதனமாக திசை திருப்பி செல்போனை ஆட்டையபோட்ட நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

 

இளநீர் கடைப் பெண்ணை நூதனமாக திசை திருப்பி செல்போனை ஆட்டையபோட்ட நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

புதுச்சேரியில் இளநீர் விற்ற பெண்ணை திசை திருப்பி செல்போனை அபகரித்துச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி 45 அடி சாலை ஒரமாக மல்லிகா என்ற பெண் இளநீர் கடை வைத்திருக்கிறார். நேற்று மாலை மல்லிகா இளநீர் விற்பனை செய்து கொண்டிருந்த போது அங்கே வந்த இளைஞர் ஒருவர் மல்லிகாவிடம் அருகே இருக்கும் கடையில் இளநீர் கேட்பதாக கூறியுள்ளார்.

இளநீர் கடைப் பெண்ணை நூதனமாக திசை திருப்பி செல்போனை ஆட்டையபோட்ட நபருக்கு போலீஸ் வலைவீச்சு! இளநீர் கடைப் பெண்ணை நூதனமாக திசை திருப்பி செல்போனை ஆட்டையபோட்ட நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

இதை நம்பிய மல்லிகாவும் அருகில் உள்ள கடைக்கு சென்று இளநீர் கேட்டது யார் என்று காணச் சென்ற நிலையில், அந்த இளைஞன் மல்லிகாவின் செல்போனை அபகரித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். செல்போனை பறிகொடுத்த மல்லிகா பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மல்லிகாவின் புகாரின் பேரில், போலீசார் இளநீர் கடை அருகே உள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.