“ஏமாற்ற மனமில்லை” ஒரே நேரத்தில் இரு காதலிகளுடன் திருமணம்!

 

“ஏமாற்ற மனமில்லை” ஒரே நேரத்தில் இரு காதலிகளுடன் திருமணம்!

உறவினர்கள் புடைசூழ ஒரே நேரத்தில் இரு காதலிகளுடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஏமாற்ற மனமில்லை” ஒரே நேரத்தில் இரு காதலிகளுடன் திருமணம்!

மணமகன் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்யும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. திருமணம் செய்துகொண்டு மணமகன் சத்தீஷ்கரை சேர்ந்த சாந்து என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சுந்தரி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பிறகு சில மாதத்தில் ஹசீனா என்ற பெண்ணையும் தான் காதலிப்பதாக கூறி அவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் சாந்து – சுந்தரி – ஷசீனா ஆகிய மூவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

“ஏமாற்ற மனமில்லை” ஒரே நேரத்தில் இரு காதலிகளுடன் திருமணம்!

இதையடுத்து ஓராண்டுக்கு பிறகு திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி சாந்து இரு காதலியையும் கரம்பிடித்துள்ளார். இவர்கள் திருமணத்தில் மணமகள்களின் குடும்பத்தினர், மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் என சுமார் 600 பேர் கலந்து கொண்டுள்ளனர். காதலித்த இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டு உள்ளேன்; இருவரையும் ஏமாற்ற மனமில்லை என்று மணமகன் சாந்து பேட்டியளித்துள்ளது கூடுதல் அதிர்ச்சி.