ஒரு வீடு இரு வாசல் ! காதலியை வீட்டிற்கே அழைத்து வந்து குடும்பம் நடத்துவதாக மனைவி புகார் !!

 

ஒரு வீடு இரு வாசல் ! காதலியை வீட்டிற்கே அழைத்து வந்து குடும்பம் நடத்துவதாக மனைவி புகார் !!

ஒரு வினோதமான வழக்கில், காதலியை வீட்டிற்கே அழைத்து வந்து குடும்பம் நடத்தியதாகவும், அதை ஏற்க மறுத்த தன்னை தாக்கியதாகவும் பெண் புகார் அளித்துள்ளார் !
இந்த சம்பவம் குஜராத்தின் கெடா மாவட்டம் சிஜ்வாடா கிராமத்தில் பதிவாகியுள்ளது. இரண்டு பெண்களும் ஒரே வீட்டில் வாழவேண்டும் என கணவர் வற்புறுத்தியதாகவும் அவளுடன் இணக்கமாக பழகுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு வீடு இரு வாசல் ! காதலியை வீட்டிற்கே அழைத்து வந்து குடும்பம் நடத்துவதாக மனைவி புகார் !!
இதுகுறித்து அந்த பெண் தெரிவிக்கையில் இரு வீட்டாரும் சம்மதித்து முறைப்படி அவரை திருமணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார். ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் தனது கணவர், நாடியாட் நகரில் வசிக்கும் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அந்தப் பெண்ணுடன் தனது கணவர் முறையற்ற வகையில் வாழ்வது எனக்கு தெரியவந்தது. இதுகுறித்து நான் கணவரை கண்டித்தேன். ஆனால் என் கணவர் தனது காதலியை எங்கள் வீட்டிற்கு அழைத்து வர விரும்புவதாக எனக்குத் தெரிவித்தார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் அதை ஆட்சேபித்தபோது, அவர் என்னை அடித்தது மட்டுமின்றி சம்மதிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். மேலும் அவர் என்னை தனது காதலியுடன் பேசும்படி கட்டாயப்படுத்தினார் என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணியான மனைவி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி வேறு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். தனது மனைவியை வதோதராவில் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று என்னை அடித்து, சில காகிதங்களில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்தினார். அவர் என்னைக் கொன்று என் குழந்தையை கருக்கலைப்பு செய்வதாகவும் மிரட்டினார். நான் ஆவணங்களில் கையெழுத்திட்ட பிறகு என்னை விடுவித்தார். என வேதனை தெரிவித்துள்ளார் அந்த பெண்.