“ரெண்டு பேருக்கு மேல என்னால முடியலே “சூதாட்டத்தில் கணவன் தோற்றதால் மனைவி படும் வேதனை ..

 

“ரெண்டு பேருக்கு மேல என்னால முடியலே “சூதாட்டத்தில் கணவன் தோற்றதால் மனைவி படும் வேதனை ..


தன்னுடைய மனைவியை வைத்து சூதாட்டம் விளையாடி தோற்ற கணவன், அவரை நண்பர்களுடன் செல்லுமாறு கொடுமைப்படுத்தியதால் கைது செய்யப்பட்டார்


பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் சோனு ஹரிஜன் என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினரோடு வசித்துவந்தார் .இந்நிலையில் சோனு ஹரிஜனுக்கு சீட்டாடும் பழக்கம் இருந்துள்ளது .அதனால் அவர் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டினருகேயுள்ள தோட்டத்தில் அவரின் நண்பர்களோடு சூதாட்டம் விளையாடி பொழுதை கழித்து வந்துள்ளார் .
கடந்த மாதம் அவர் தன்னுடைய மனைவியை வைத்து சூதாட்டம் விளையாடியுள்ளார் .அப்போது அவரின் நண்பர்களிடம் அவர் தன்னுடைய மனைவியை தோற்று போயுள்ளார் .அந்த பந்தயப்படி அவர் தன்னுடைய நண்பர்களிடம் அவரின் மனைவியை அனுப்பி வைத்துள்ளார் .அப்போது அவரின் மனைவியால் இரண்டு மூன்று முறைக்கு மேல் அவரின் நண்பர்களோடு போக முடியாமல் வீட்டிற்கு வந்து விட்டார் .பின்னர் அவரின் கணவர் அவர் மீது ஆசிட் வீசி கொடுமைப்படுத்தியுள்ளார் .அதனால் அந்த பெண் தன்னுடைய கணவரின் வீட்டிலிருந்து தப்பித்து தன்னுடைய தந்தை வசிக்கும் லோடிப்போருக்கு தப்பித்து ஓடினார் .பின்னர் தன்னுடைய தந்தையிடம் சென்று கணவரின் கொடுமைகள் பற்றி புகார் கூறினார் .அதன் பின்னர் அவரின் தந்தையோடு சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் கணவர் மீது புகாரளித்தார் .போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த கணவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .

“ரெண்டு பேருக்கு மேல என்னால முடியலே “சூதாட்டத்தில் கணவன் தோற்றதால் மனைவி படும் வேதனை ..