“உயிரை எடுத்தார் ,உறவு கொண்டார்” -ஒரு மருமகனால் மனைவி ,மச்சினி ,மாமியாருக்கு நேர்ந்த நிலை

 

“உயிரை எடுத்தார் ,உறவு கொண்டார்” -ஒரு மருமகனால் மனைவி ,மச்சினி ,மாமியாருக்கு நேர்ந்த நிலை

கள்ள காதல் விவகாரத்தில் தன்னுடைய மனைவி ,மச்சினி மற்றும் மாமியாரை கொலை செய்து அவர்களின் உடல்களோடு உறவுகொண்ட ஒரு கணவனை போலீசார் கைது செய்துள்ளனர் .
ஹரியானாவின் பானிபட்டில் சமல்கா நகரில் ஹசன் என்று 27 வயது கணவன் தனது மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அவரின் மனைவி மதுவுக்கு அங்குள்ள ஒரு வாலிபரிடம் கள்ள உறவு ஏற்பட்டதாக ஹசன் சந்தேகப்பட்டார் .இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது .அப்போது இந்த விவகாரம் அவரின் மாமியார் ஜமீலா மாறும் மச்சினி மனீஷா வுக்கு தெரிந்துள்ளது ஆனால் அவர்கள் மனைவியை கண்டிக்காமல் அவரின் காதலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக ஹசன் சந்தேகப்பட்டார் .


இதனால் அவர் மூவரையும் கொலை செய்ய முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கினார் .
அதன்படி முதலில் அவரின் மாமியாரை வெளியே அழைத்து சென்று கொலை செய்து விட்டு வந்தார் .பிறகு வீட்டிலிருந்த அவரின் மனைவி மற்றும் மச்சினியை கொலை செய்து விட்டார் .இந்த கொலைகளை அவர் செப்டம்பர் 5,6,7 தேதிகளில் செய்துள்ளார் .பிறகு அவர்களின் உடலை ஒரு துணியால் சுற்றி குப்பை தொட்டியில் வீசியுள்ளார் .இது பற்றி பொது மக்கள் கொடுத்த புகாரில் போலீசார் அவர்களின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்த போது மூவரையும் அவர் கொன்று விட்டு அந்த உடல்களோடு உறவு கொண்டுள்ள விஷயம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது .போலீசார் அந்த கணவன் ஹசனை பிடித்து விசாரித்த போது அவர் தன்னுடைய குற்றத்தினை ஒப்புக்கொண்டார் .பிறகு போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

“உயிரை எடுத்தார் ,உறவு கொண்டார்” -ஒரு மருமகனால் மனைவி ,மச்சினி ,மாமியாருக்கு நேர்ந்த நிலை