“கண்டபடி அனுபவிச்சிட்டு கான்க்ரீட் போட்டு பூசிட்டியே” -காதலனை நம்பி போன காதலியின் கதி

 

“கண்டபடி அனுபவிச்சிட்டு கான்க்ரீட் போட்டு பூசிட்டியே” -காதலனை நம்பி போன காதலியின் கதி

தன்னை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை கொலை செய்து வீட்டின் சுவற்றில் வைத்து  கான்க்ரீட் போட்டு பூசிய காதலனை போலீசார் கைது செய்தார்கள்.

“கண்டபடி அனுபவிச்சிட்டு கான்க்ரீட் போட்டு பூசிட்டியே” -காதலனை நம்பி போன காதலியின் கதி

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கருகேயுள்ள பால்கரில் அமிதா என்ற 32 வயதான பெண்ணும் சூரஜ் என்ற 35வயதான வாலிபரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள் .அவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிந்ததால் அவரின் காதலை கை விடுமாறு வீட்டில் கூறினார்கள் .ஆனால் அந்த பெண் அமிதா அதற்கு மறுத்து வாழ்ந்தால் அவரோடுதான்  வாழ்வேன் என பிடிவாதம் பிடித்துள்ளார் .இந்நிலையில் அந்த அமிதாவின் வீட்டில் டார்ச்சர் செய்ததால் அந்த பெண் அவரின் காதலன் சூரஜோடு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு போய் விட்டார் .

அதன் பிறகு இருவரும் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்கள் .அப்போது அந்த பெண் அமிதா அந்த காதலன் சூரஜிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினர் .அனால் அதற்கு அந்த காதலன் மறுத்து, இப்படியே லிவிங் டுகெதர்ஆக வாழலாம் என்று கூறியுள்ளார் .அதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது .அதனால் அந்த காதலன்  அந்த  பெண் அமிதாவை கொன்று அவரின் சடலத்தை அந்த வீட்டில் உள்ள  குளியலறையில் உள்ள சுவற்றுக்குள் கான்க்ரீட் வைத்து பூசிவிட்டார் .

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது .அதனால் மூன்று மாதங்களாக தன்னுடைய சகோதரி தன்னோடு போனிலும், ஊடகத்திலும் தொடர்பில் இல்லாததால் சந்தேகப்பட்ட அவரின் அண்ணன் போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த காதலன்  வீட்டை சோதனையிட்டார்கள் .அப்போது அந்த வீட்டின் குளியலறையில் புதிதாக சிமெண்ட் பூசியுள்ளதை கண்டு அதை இடித்த போது உள்ளே அழுகிய நிலையில் அமிதாவின் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்கள் .பிறகு அவரின் காதலனை கைது  செய்து சிறையிலடைத்தார்கள் .

“கண்டபடி அனுபவிச்சிட்டு கான்க்ரீட் போட்டு பூசிட்டியே” -காதலனை நம்பி போன காதலியின் கதி