“டேய் நான் உன் அத்தை ,என்னை விடுடா” -கெஞ்சிய அத்தைக்கு மச்சினரால் நடந்த விபரீதம் .

 

“டேய் நான் உன் அத்தை ,என்னை விடுடா” -கெஞ்சிய அத்தைக்கு மச்சினரால் நடந்த விபரீதம் .


சொத்து தகராறில் சொந்த அத்தையை கொலை செய்து புதைத்த ஒரு உறவினரை போலீசார் கைது செய்தனர்

“டேய் நான் உன் அத்தை ,என்னை விடுடா” -கெஞ்சிய அத்தைக்கு மச்சினரால் நடந்த விபரீதம் .


ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அமர்ஜீத் என்பவருக்கு 21 ஏக்கர் நிலம் இருந்தது .அவருக்கு 51 வயதில் சுரிந்தர் கவுர் என்ற திருமணமாகாத சகோதரியும் இருந்தார் .மேலும் அவருக்கு குர்பிரீத் என்றொரு மகனும் இருந்தார் .இந்நிலையில் அந்த நபர் தன்னுடைய 21 ஏக்கர் நிலத்தை சரியாக பிரிக்காமல் இறந்துள்ளார் .இதனால் அவரின் சகோதரிக்கும் அந்த நிலத்தில் பாதி பங்கு செல்லவிருந்தது .இதனால் அவரின் மகன் அமர்ஜித் அந்த முழு சொத்தும் தனக்கு சேரவேண்டுமென்று நினைத்தார் .அதனால் அவரின் அத்தை கவுரை கொன்று விட்டால் ,கல்யாணமாகாத அவரின் முழு சொத்தும் தனக்கு வந்துவிடுமென்று கணக்கு போட்டார் .

அதனால் கடந்த வாரம் மேதேடியில் நடைபெற்ற ஒரு குடும்ப விழாவில் அனைவரும் கலந்து கொள்ளவிருந்தனர் .அப்போது அந்த கவுரும் கலந்துகொள்ளவிருந்தார் .அப்போது அங்கு வந்த குருப்ரீத் அவரிடம் தான் அவரை பைக்கில் கொண்டு போய் விடுவதாக கூறி தன்னுடைய பைக்கில் கூட்டி சென்றார் .அப்போது அவரோடு அவரின் நண்பர் ஒருவரும் வேறொரு பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்தார் .
அப்போது அந்த நபர் அந்த பெண்ணை அங்குள்ள வயலுக்கு கூட்டி சென்று அவரின் கழுத்தை நெரித்து துடிக்க கொன்றார் .பின்னர் அவரின் பிணத்தை அந்த நிலத்தில் புதைத்து விட்டார் .மறுநாள் அந்த பெண் கவுரை காணாத அவரின் உறவினர் போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து அவரை கொன்ற அவரின் மச்சினர் குருப்ரீத்தை கைது செய்தனர் .