“கண்டவனோட சுத்தாத ,கர்ப்பமாகி நிக்காத” -பண்ணையில் வேலை செய்பவரை காதலித்த மகளுக்கு பண்ணையாரால் நேர்ந்த நிலை .

 

“கண்டவனோட சுத்தாத ,கர்ப்பமாகி நிக்காத” -பண்ணையில் வேலை செய்பவரை காதலித்த மகளுக்கு   பண்ணையாரால் நேர்ந்த நிலை .

ஒரு தலித் வாலிபரை காதலித்த ஒரு கல்லூரி மாணவியை, அவரின் தந்தையே கொலை செய்து பள்ளம் தோண்டி புதைத்த சம்பவம் நாட்டில் சாதிக்கொடுமையின் தீவிரத்தை எடுத்து காட்டுகிறது
கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தில் பெட்டஹள்ளியில் 48 வயதான கிருஷ்ணப்பா என்பவரின் 18 வயது மகள் ஹேமலதா .இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் தங்களின் பண்ணையில் வேலை செய்யும் ஒரு தலித் வாலிபர் புனித் என்பவரை காதலித்து வந்தார் .இதனால் இவர்களின் காதல் விவகாரம் அவரின் தந்தைக்கு தெரியவே அவர் தன்னுடைய மகளை கூப்பிட்டு கண்டித்தார் .

“கண்டவனோட சுத்தாத ,கர்ப்பமாகி நிக்காத” -பண்ணையில் வேலை செய்பவரை காதலித்த மகளுக்கு   பண்ணையாரால் நேர்ந்த நிலை .


ஆனால் அவரின் மகள் தந்தை சொல்வதை கேட்காமல் அவரின் காதலரோடு மீண்டும் அங்குள்ள பார்க் ,ஹோட்டல் என்று உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளார் .இதை பற்றி கேள்விப்பட்ட அவரின் தந்தை மகளை பலமுறை கண்டித்தும், திட்டியும், அடித்தும் அவர் அடங்கவில்லை .இதனால் அவர் தன்னுடைய மகளை கொலை செய் முடிவு செய்தார் .
அதன்படி அக்டோபர் 7ம் தேதி அவரின் இரு மருமகன்கள் உதவியோடு தன்னுடைய மகளை கொலை செய்து விட்டு அவரின் பிணத்தை ஓர் பள்ளம் தோண்டி புதைத்து விட்டார்கள் .பிறகு அக்டோபர் 9 ம் தேதியன்று காவல் நிலையம் சென்று தன்னுடைய மகளை காணவில்லையென்று புகாரளித்தார் .மேலும் ,அவரை அவரின் காதலன் புனித் என்பவர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசிடம் கூறினார் .போலீசார் அவரின் புகாரை பெற்று விசாரித்து ,அவரின் மகளை புதைத்த இடத்தில் தோண்டியெடுத்தனர் .பிறகு அவர்கள் தீவிர விசாரணையில் அவரின் தந்தை தன்னுடைய மருமகன்களோடு சேர்ந்து கொண்டு மகளை கொன்ற விஷயம் தெரிந்து அவரை கைது செய்தனர் .

“கண்டவனோட சுத்தாத ,கர்ப்பமாகி நிக்காத” -பண்ணையில் வேலை செய்பவரை காதலித்த மகளுக்கு   பண்ணையாரால் நேர்ந்த நிலை .