காதலியை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற கள்ளக்காதலன்… தொடர்பை துண்டித்ததால் நடந்த விபரீதம்!

 

காதலியை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற கள்ளக்காதலன்… தொடர்பை துண்டித்ததால் நடந்த விபரீதம்!

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் கோபி. இவருக்கு யசோதா ராணி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கோபி கால் டாக்சி டிரைவராக உள்ள நிலையில் யசோதா ராணி அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், யசோதா ராணி நேற்று மதியம் கடையில் துணி தைத்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த நபர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பிறகு ஆத்திரத்தில் அந்த நபர் அங்கிருந்த கத்தரிகோலை எடுத்து யசோதாவை குத்தி கொலை செய்துள்ளார்.

காதலியை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற கள்ளக்காதலன்… தொடர்பை துண்டித்ததால் நடந்த விபரீதம்!

இதை கண்ட அப்பகுதிவாசிகள் போலீசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கொலையான யசோதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சேலையூர் கணபதிபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்தனர்.

காதலியை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற கள்ளக்காதலன்… தொடர்பை துண்டித்ததால் நடந்த விபரீதம்!
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், “யசோதாவுக்கும் செல்வகுமாருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையடுத்து யசோதா செல்வகுமாருடனான தொடர்பை துண்டித்து பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் செல்வகுமார் அவரை கொலை செய்தது தெரியவனத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.