மனைவி மீது உள்ள சந்தேகத்தால் மகனை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்!

 

மனைவி மீது உள்ள சந்தேகத்தால் மகனை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்!

ஒரு நபர் தனது கடைசி மகன் தனக்குப் பிறக்கவில்லை என்று சந்தேகித்து சிறுவனை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோதமான சம்பவம் சி பெலகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தமன் பல்லே என்ற கிராமத்தில் சனிக்கிழமை அரங்கேறியுள்ளது

கிடைத்த தகவல்களின் படி, நாகேஸ்வர் ரெட்டியும் சரிதா தம்பதிக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு ஐந்து மற்றும் இரண்டு வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில காலமாக தனது கடைசி மகன் தனக்குப் பிறக்கவில்லை என்றும் நாகேஸ்வர் சந்தேகமடைந்து தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

மனைவி மீது உள்ள சந்தேகத்தால் மகனை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்!

சனிக்கிழமை நாகேஸ்வர் தனது இரண்டாவது மகன் சந்தீப்பின் தொண்டையை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் போது சரிதா அங்கில்லை.சம்பவம் நடந்த நேரத்தில் சரிதா அங்கு இல்லை. பின்னர் திரும்பி வந்த சரிதா ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மகனைப் பார்த்து துடித்து போயிருக்கிறார். பின்னர் அக்கம் பக்கத்தினர் விரைந்து சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக ம்மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்ற நாகேஸ்வரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டள்ளனர்.