கள்ளக்காதலியை கொன்றார் -பிணத்தின் மேலேயே பலமாதம் வாழ்ந்தார் -மதம் மாற மறுத்த பெண்ணை கொன்று புதைத்த காதலன் ..

 

கள்ளக்காதலியை கொன்றார் -பிணத்தின் மேலேயே பலமாதம் வாழ்ந்தார் -மதம் மாற மறுத்த பெண்ணை கொன்று புதைத்த காதலன் ..

தன்னுடைய கள்ளக்கதலி தன்னுடைய மதத்திற்கு மாற மறுத்ததால், அவரை கொன்று புதைத்து அந்த பிணத்தின் மேலேயே ஒருவர் பல மதம் வாழ்ந்து வந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

கள்ளக்காதலியை கொன்றார் -பிணத்தின் மேலேயே பலமாதம் வாழ்ந்தார் -மதம் மாற மறுத்த பெண்ணை கொன்று புதைத்த காதலன் ..

உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் பர்தாபூர் பகுதியில் வசிக்கும் ஷம்சாத் என்ற இஸ்லாமிய வாலிபர் திருமணமாகி டைவர்ஸ் ஆன ஒரு இந்து பெண்னோடு கள்ளக்காதல் வைத்துக்கொண்டு அவரோடு நான்கு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தார் .அந்த பெண்ணுக்கு முதல் கணவன் மூலம் பத்து வயதில் ஒரு மகளும் இருக்கிறார் .அவரும் இவர்களோடு வாழ்ந்து வருகிறார் .
இந்நிலையில் இஸ்லாமியரான ஷம்ஷத் இந்து பெண்ணான தன்னுடைய கள்ளக்காதலியை முஸ்லீம் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தினார் .ஆனால் அந்த பெண் அதற்கு சம்மதிக்காததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்தது .இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் அந்த பெண்ணையும் ,அவரின் பத்து வயது மகளையும் ஷம்சாத் கொலை செய்து அந்த வீட்டின் முற்றத்தில் புதைத்துள்ளார் .அதுமட்டுமல்ல அவர்களின் பிணத்தின் மேலேயே நான்கு மாதமாக வசித்து வந்துள்ளார் .

கள்ளக்காதலியை கொன்றார் -பிணத்தின் மேலேயே பலமாதம் வாழ்ந்தார் -மதம் மாற மறுத்த பெண்ணை கொன்று புதைத்த காதலன் ..இந்நிலையில் இறந்த அந்த பெண்ணின் தோழியொருவர் தன்னுடைய தோழி நீண்ட நாட்களாக தன்னோடு தொடர்பில் இல்லாததால் சந்தேகப்பட்டு, அந்த பகுதி காவல் நிலையத்தில் தன்னுடைய தோழியையும் அவரின் மகளையும் காணவில்லை என்று புகார் தந்தார் .அந்த பெண்ணின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஷம்சாத் அந்த இருவரையும் கொன்று வீட்டின் முற்றத்தில் புதைத்த விவரம் அறிந்தார்கள் .பிறகு அந்த வீட்டில் புதைக்கப்பட்ட இரு பிணங்களின் எலும்புக்கூடுகளை கைப்பற்றினார்கள் .இந்நிலையில் கொலையை செய்த ஷம்சாத் தலைமறைவாகியுள்ளார் .அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்