மூதாட்டியை வன்கொடுமை செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

 

மூதாட்டியை வன்கொடுமை செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

இராமநாதபுரம் அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வயதானவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மூதாட்டியை வன்கொடுமை செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

கடந்த 2018-ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் ஜெட்டி பகுதியை சேர்ந்த 70 வயதான மூதாட்டி உடல்நிலை சரியில்லாத நிலையில் வீட்டில் படுத்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 60 வயதான முத்துமாரி குடிபோதையில் பலவந்தமாக மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குற்றவாளியான முத்துமாரிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் அபராதத்தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து இராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா உத்தரவிட்டார்.