சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை

 

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த இருந்திராபட்டியச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரஞ்சித். இவர் கடந்த ஆண்டு ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக இலுப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி சத்யா தீர்ப்பளித்துள்ளார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித்துக்கு போக்சோ பிரிவில் 10 ஆண்டுகளும், சிறுமி கடத்தல் பிரிவில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மேலும் ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளார்.

இந்த தண்டனைகளை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் .