மாஸ்க்கை கோவணமாக கட்டிக்கொண்டு ஊர்வலமாக போன வாலிபர் -இதை பார்த்தா கொரானா வைரஸே குதிச்சி ஓடிப்போயிடுமுங்கோ..

 

மாஸ்க்கை கோவணமாக கட்டிக்கொண்டு ஊர்வலமாக போன வாலிபர் -இதை பார்த்தா கொரானா வைரஸே குதிச்சி ஓடிப்போயிடுமுங்கோ..

கொரானா வைரஸ் உலகில் பரவிய நாள் முதல் அதைப்பற்றிய மீம்ஸ்களும் இணைய தளத்தை தெறிக்க விடுகின்றன .இது ஒரு பக்கமிருக்க , வைரஸை தடுக்க மாஸ்க் போட சொன்னால் சிலர் தங்கத்தில் மாஸ்க் போடுகிறார்கள் .இன்னும் சிலர் சிரிக்கும் ஸ்டைலுடன் மாஸ்க் தயாரித்து போட்டுக்கொள்கிறார்கள் .
இந்நிலையில் லண்டனில் ஒரு வாலிபர் சென்ற வாரம் திடீரென மாஸ்க்கை முகத்துக்கு போடாமல் அதை இடுப்புக்கு கீழே கோவணமாக கட்டிக்கொண்டு சாலையில் நடந்து செல்லும் போட்டோக்கள் இணைய தளத்தில் வைரலாகியுள்ளது .
லண்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு வீதியைச் சுற்றி அந்த வாலிபர் உடலில் ஒட்டு த்துணியில்லாமல் இடுப்புக்கு கீழே முகக்கவசம் மட்டும் அணிந்த படி உலா வருகிறார் .அந்த காட்சியினை லண்டன் தெருவில் போகும் பல பெண்கள் பார்த்து ரசிக்கிறார்கள் .
Image
அவர் எதனால் இப்படி செய்தார் என்று தெரியவில்லை .இருந்தாலும் மாஸ்க் அணிவது கொரானா வைரசை அழிக்கும் என்று பிரிட்டனில் மாஸ்க் அணிய கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அந்த வாலிபர் அதை கேலி செய்ய இப்படி சென்றாரா? அல்லது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி போனாரா? என்று தெரியவில்லை .அமெரிக்கா போன்ற நாடுகளில் மாஸ்க் அணிவது ‘எங்களின் சுவாசிக்கும் உரிமைக்கு எதிரானது’ என்று சிலர் போராடி வரும் வேலையில், இப்படி ஒருவர் சென்றது வேடிக்கையாக உள்ளது .எப்படியிருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் மாஸ்க் அணிவது ஒன்றே கொரானா வைரஸை தடுக்கும் ஒரே வழி என்பதால் அனைவரும் மாஸ்க் அணிவோம் கொரானாவை தடுப்போம் .

மாஸ்க்கை கோவணமாக கட்டிக்கொண்டு ஊர்வலமாக போன வாலிபர் -இதை பார்த்தா கொரானா வைரஸே குதிச்சி ஓடிப்போயிடுமுங்கோ..