“மாஸ்க் போடு ,இல்லேன்னா மண்டையிலே போடு” -மாஸ்க் அணியாதவருக்கு நேர்ந்த கதி

 

“மாஸ்க் போடு ,இல்லேன்னா மண்டையிலே போடு” -மாஸ்க் அணியாதவருக்கு நேர்ந்த கதி


மாஸ்க் போடாமல் சாலையில் சென்ற ஒரு தந்தை மற்றும் மகனை ஒரு வாலிபர் கூட்டம் கடுமையாக தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

“மாஸ்க் போடு ,இல்லேன்னா மண்டையிலே போடு” -மாஸ்க் அணியாதவருக்கு நேர்ந்த கதி

ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தின் நியூ காலனி பகுதியில் புதன்கிழமை தர்மேந்திர தாஸ் மற்றும் அவரது மகன் குஷ் ஆகிய இருவரும் தங்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள பேக்கரிக்குச் சென்றிருந்தனர்.அப்போது அவர்களிருவரும் மாஸ்க் அணியாமல் சென்றுள்ளனர் .அந்த நேரம் சாலையில்,நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபர் கூட்டம் அங்கு போய்க்கொன்றிருந்த தர்மந்திரவிடமும் அவரின் மகனையும் ‘ஏன் மாஸ்க் அணியாமல் போகிறீர்கள் ,கொரானா வைரஸ் வந்துவிடுமே’ என்று கேட்டனர் .அதற்கு அந்த தர்மேந்திரா ‘என் வீட்டிற்கு அருகில்தான் செல்கிறேன் இதற்கு ஏன் மாஸ்க் “என்று கேட்டுள்ளார் .
அதற்கு அந்த வாலிபர் கூட்டம் பக்கத்து வீட்டுக்கு போனாலும் மாஸ்க் போடவேண்டுமென்று ஆக்ரோஷமாக பேசியுள்ளார்கள் .இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றியுள்ளது .அப்போது அந்த வாலிபர் கூட்டம் அந்த தந்தை மற்றும் மகனை அவர்கள் கையில் வைத்திருக்கும் கட்டை கொண்டு தாக்கி அவர்களின் மண்டையை உடைத்துள்ளது ,இதன் அவர்களுக்கு கடுமையான காயங்கள் உடல் முழுவதும் ஏற்பட்டு ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது .அப்போது அங்கே வந்த அந்த பகுதி மக்கள் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள் .,.இந்த கலவரம் பற்றி கேள்விப்பட்ட போலீஸ் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபர் கூட்டத்தினை தேடி வருகிறர்கள் .

“மாஸ்க் போடு ,இல்லேன்னா மண்டையிலே போடு” -மாஸ்க் அணியாதவருக்கு நேர்ந்த கதி