ஆலங்காயம் அருகே உரிமமின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

 

ஆலங்காயம் அருகே உரிமமின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். ஆலங்காயம் அடுத்த பூங்குளம் ஆலமரத்து வட்டம் பகுதியில் சிலர், நாட்டு துப்பாக்கி மூலம் வன விலங்குகளையும், வயல் வெளிகளில் திரியும் பறவைகளையும் வேட்டையாடி வருவதாக, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி., விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஆலங்காயம் அருகே உரிமமின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

இதுதொடர்பாக எஸ்.பி உத்தரவின் பேரில், ஆலங்காயம் போலீசார் பூங்குளம் ஆலமரத்து வட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய விதமாக சுற்றித்திரிந்த வசந்தகுமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை கொண்டு அவர் வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைதுசெய்த போலீசார், வீட்டில் பதுக்கிவைத்திருந்த நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.