“நிர்வாண படத்தால் நிம்மதி போச்சு”-மாடலிங் ஆசையில் மாட்டிக்கொண்ட பெண்

 

“நிர்வாண படத்தால் நிம்மதி போச்சு”-மாடலிங் ஆசையில்  மாட்டிக்கொண்ட பெண்

மாடலிங் தொழிலுக்கு அழகிகள் வேண்டுமென விளம்பரம் கொடுத்து,ஏமாறும் பெண்களின் நிர்வாண போட்டோவை வைத்து மிரட்டிய கூட்டத்தை போலீசார் கைது செய்தார்கள்

“நிர்வாண படத்தால் நிம்மதி போச்சு”-மாடலிங் ஆசையில்  மாட்டிக்கொண்ட பெண்

டெல்லியில் தீபக் என்பவர் இன்ஸ்டாகிராமில் தான் ஒரு மாடெலிங் தொழிலின் ஏஜென்ட் என்றும் அதனால் ஒரு வலை தொடருக்கு புதுமுக மாடல் தேவையென்றும் விளம்பரம் கொடுத்தார் .ஆனால் அவர் சமூக ஊடகசத்தில் தன்னை ஒரு பெண்ணென்றும் ,தனது பெயர் ராஷி என்று கூறி அவர் பெண்களுக்கு வலை வீசினார் .அப்போது அவர் வீசிய வலையில் டெல்லியை சேர்ந்த ஒரு 17 வயது ப்ரியா என்ற பெண் சிக்கினார் .அவர் இன்ஸ்டாகிராமில் ராசியை தொடர்பு கொண்டு தான் மாடலிங் செய்ய விரும்புவதாக கூறியதும் அதற்கு ராசி அந்த பெண்ணிடம் தங்களின் நிர்வாண போட்டோவை உடனே அனுப்புமாறு கேட்டார் ..அதை கேட்டு அதிர்ச்சியுற்ற அவர் எதற்கு இப்படி கேட்கிறீர்கள் என்று கேட்ட போது, வலை தொடர் தயாரிப்பாளர்கள் அப்படித்தான் கேட்கிறார்களென்று கூறி அவரிடம் நிர்வாண போட்டோவை ஏமாற்றி வாங்கினார் .
பிறகு அந்த பெண்ணிடம் சில நாள் கழித்து சிலர் தொடர்பு கொண்டு தங்களின் நிர்வாண போட்டோ தங்களிடம் சிக்கியுள்ளதென்றும் ,அதை ஊடகத்தில் வெளியிடுவோமென்றும் ,அப்படி வெளியிடாமலிருக்க சில லட்சங்கள் பணமோ அல்லது தங்களையோ கொடுக்கவேண்டுமென்று கூறி பல நாட்களாக துன்புறுத்தி வந்துள்ளனர் .அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் அங்குள்ள போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து அவரை கைது செய்த போது அவர் ஏற்கனவே இதே போல ஹரியானாவில் செய்துள்ளதை கண்டுபிடித்தனர் .

“நிர்வாண படத்தால் நிம்மதி போச்சு”-மாடலிங் ஆசையில்  மாட்டிக்கொண்ட பெண்