வலியால் துடித்த நோயாளி -காக்க வைத்த டாக்டர்-அறைக்குள் நுழைந்த நோயாளி என்ன செஞ்சார் பாருங்க

 

வலியால் துடித்த நோயாளி -காக்க வைத்த டாக்டர்-அறைக்குள் நுழைந்த நோயாளி என்ன செஞ்சார் பாருங்க


க்ளினிக்கில் வலியால் துடித்த நோயாளியை ஒரு டாக்டர் காக்க வைத்ததால் அந்த நோயாளி டாக்டரை தாக்கினார் .

வலியால் துடித்த நோயாளி -காக்க வைத்த டாக்டர்-அறைக்குள் நுழைந்த நோயாளி என்ன செஞ்சார் பாருங்க


உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவின் அருகிலுள்ள ஜார்ச்சாவைச் சேர்ந்த முகமது குமெயில் (21) என்பவருக்கு பல் வலி இருந்தது. அதனால் சனிக்கிழமை காலை 11 மணியளவில், டெல்லியின் தாத்ரி பகுதியில் உள்ள பல் மருத்துவர் அஜய் கோஷ் சர்மா (45) என்பவரிடம் சிகிச்சைக்காக சென்றார் .அப்போது அங்கு நிறைய நோயாளிகள் இருந்ததால் ,அவரால் உடனே பல் மருத்துவரை பார்க்க முடியவில்லை .அதனால் அங்கு அவர் பலமணி நேரம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது .
அதனால் கோவப்பட்ட குமைல் அந்த கிளினிக்கில் உள்ள பல் மருத்தவரின் அறை கதவை தள்ளிவிட்டு அனுமதியில்லாமல் உள்ளே சென்றார் .அப்போது அந்த டாக்டர் அவரிடம் கோவப்பட்டு சத்தம் போட்டார் .பதிலுக்கு அந்த நோயாளியும் சத்தம் போட்டார் .பிறகு இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் நடந்தது .அப்போது எதிர்பாராவிதமாக அந்த நோயாளி அந்த டாக்டரை அங்கிருந்த பல் சிகிச்சை ஆயுதங்களை கொண்டு தாக்கினார் .இதில் அந்த பல் டாக்டர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் .உடனே அவரை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் சிகிச்சைக்காக பக்கத்தில் உள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிச்சியளிக்கப்பட்டு வருகிறது .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த டாக்டரை தாக்கிய நோயாளி குமைலை கைது செய்தனர் .