“இதுக்காகவா கையை துண்டிப்பிங்க” -நடந்து வந்தவருக்கு பைக்கில் வந்தவர்களால் நடந்த சோகம் .

 

“இதுக்காகவா கையை துண்டிப்பிங்க”  -நடந்து வந்தவருக்கு பைக்கில் வந்தவர்களால் நடந்த சோகம் .

ஒரு டேப்லெட்டுக்காக ஒருவரின் கையை துண்டித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

“இதுக்காகவா கையை துண்டிப்பிங்க”  -நடந்து வந்தவருக்கு பைக்கில் வந்தவர்களால் நடந்த சோகம் .

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அமிர்தசரஸ் நவுஷெரா நங்லி கிராமத்தில் 35 வயதான நபர் வசித்து வந்தார் .அவர் கடந்த திங்களன்று  பிளாத் விஸ்வாஸ் கிராமத்திலிருந்து தனது சொந்த ஊருக்கு நடந்து வந்து கொண்டிருந்தார் .அப்போது அவரிடம் டேப்லெட் மற்றும் ரூ .1,500 ரூபாய் பணம் இருந்தது .

அப்போது பைக்கில் வந்த இரண்டு கொள்ளையர்கள் அவரை வழி மறித்தனர் .அவர்களை பார்த்ததும் அந்த நபர் ஓட தொடங்கினார் .ஆனால் அவர்கள் அவரை மறித்து ,ஒரு அருவாளை எடுத்து .அவரின் கையை துண்டித்தனர் .

அதன் பிறகு அவரின் துண்டிக்கப்பட்ட கை சாலையில் துண்டாக கிடந்தது .அப்போது அவர் வலியால் துடித்து கொண்டிருந்த போது ,அந்த கொள்ளையர்கள் அவரிடமிருந்து பணம் மற்றும் டேப்லெட் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர் .இந்த சம்பவம் வீடியோவில் படம் பிடிக்கப்பட்டுஊடகத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர்  சாலையில் உட்கார்ந்திருப்பதையும் , அவரின் துண்டித்த  கை தரையில் கிடப்பதையும் காட்டியது.அதன் பிறகு  அந்த நபரையும் ,அவரின் துண்டிக்கப்பட்ட கையையும் அங்குள்ளவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு உடனே அவரின் கையை அவரின் உடலில் சேர்த்து டாக்டர்கள் தைத்தனர் .அதனால் இப்போது அந்த நபர் நலம் பெற்று வருகிறார் .பிறகு போலிசுக்கு இந்த கொள்ளை சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் வழக்கு பதிந்து அந்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர் .