“நடுரோட்டில் காதலியை அடித்து ,உதைத்து ..”ஒரு காதலன் செய்த செயலால் பலர் அதிர்ச்சி.

 

“நடுரோட்டில் காதலியை அடித்து ,உதைத்து ..”ஒரு காதலன் செய்த செயலால் பலர் அதிர்ச்சி.

கர்நாடகா மாநிலம் ஹப்பல்லியில் தேஷ்பாண்டே நகரில் ரம்புரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் இஸ்மாயில்.30 வயதான அவர் அதே பகுதியில் உள்ள ஒரு நகை கடையில் வேலை பார்க்கும் இளம் பெண் ஆஷா டி அகசரா என்பவரை காதலித்து வந்தார் . அவர் தர்கா அருகே ஒரு நகைக் கடையில் விற்பனை பெண்ணாக வேலை செய்கிறார் .

“நடுரோட்டில் காதலியை அடித்து ,உதைத்து ..”ஒரு காதலன் செய்த செயலால் பலர் அதிர்ச்சி.


அந்த காதலர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசிப்பதால் அவர்களின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்துள்ளது .ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் வந்துள்ளது .அப்போதெல்லாம் இருவரும் சண்டை போட்டுவிட்டு பிறகு சேருவது வழக்கம் .ஆனால் கடந்த வாரம் அவர்களுக்குள் மீண்டும் ஏதோ காரணத்தால் தகராறு வந்துள்ளது அதன் காரணமாக அந்த காதலன் இஸ்மாயில் ஹுபலியின் தேஷ்பாண்டே நகரில் உள்ள சாலையின் நடுவில் அந்த காதலியை அடித்து கீழே தள்ளியுள்ளார் .அதன் காரணமாக வலி பொறுக்க முடியாமல் கூச்சலிட்டபடி சாலையில் படுத்திருந்த அந்த காதலியை அவர் அங்கிருந்த ஒரு பெட்ஷீட் துணியால் கடுமையாக தாக்கினார் .இந்த காட்சியை அந்த சாலையில் சென்றவர்கள் வேடிக்கை பார்த்தவாறு சென்றார்கள் .ஆனால் இறுதியில் ஒரே ஒருவர் மட்டும் வந்து அந்த பெண்ணை அவரிடமிருந்து காப்பாற்றினார் .மேலும் இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி காமெராவில் பதிவாகியுள்ளது .அதனால் அந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது .போலீசார் இந்த தாக்குதலை நடத்திய அந்த வாலிபரை கைது செய்தார்கள் .

“நடுரோட்டில் காதலியை அடித்து ,உதைத்து ..”ஒரு காதலன் செய்த செயலால் பலர் அதிர்ச்சி.