“உடை மற்றும் போது உள்ளே வருவார் ,படமெடுத்து ஊரெல்லாம் விடுவார்” -கணவன் செஞ்ச களவாணித்தனம்

 

“உடை மற்றும் போது உள்ளே வருவார் ,படமெடுத்து ஊரெல்லாம் விடுவார்” -கணவன் செஞ்ச களவாணித்தனம்


ஒரு மனைவியின் ஆபாச படத்தை ஊடகத்தில் விட்டதாக அவரின் கணவர் மற்றும் அவரின் நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள் .


மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் வகாட்டில் வசிக்கும் ஒரு பெண் தன்னுடைய கணவரோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த மனைவியை அவரின் கணவன் சந்தேகப்பட்டார் .அதனால் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தில் தகராறு வந்துள்ளது .இதனால் அந்த பெண் அடிக்கடி கோபித்துக்கொண்டு தன்னுடைய சகோதரர் வீட்டிற்கு போய் விடுவார் .அதனால் அவரின் கணவருக்கு இன்னும் அவர் மேல் சந்தேகம் வந்துள்ளது .அவரின் சகோதரர் வீட்டினருகே வசிக்கும் சிலரோடு தொடர்பு இருப்பதாக எண்ணி அவரை கொடுமைகள் செய்துள்ளார் .
இதற்கிடையே அந்த பெண்னின் ஆபாச வீடியோ ஒன்று திடீரென அந்த ஊர் மக்களிடையே பரவியது .அதை அந்த பெண்ணின் சகோதரரும் பார்த்துள்ளார் .இது பற்றி அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் சகோதரர் அவரிடம் எப்படி இதை எடுத்தார்கள் என்று கேட்டார் .அப்போது அந்த பெண் தன்னுடைய கணவர்தான் இந்த வேலையை செய்தார் என்று கூறினார் .மேலும் அவர் அடிக்கடி தான் உடை மாற்றும்போது ரகசியமாக காமெராவோடு வருவரென்றும் அப்போது இதை எடுத்திருப்பாரென்றும் கூறினார் .இந்த வீடியோவை அவரின் நண்பர் ஒருவர் உதவியுடன் ஊடகத்தில் பலருக்கு அனுப்பியுள்ளார் என்றும் கூறினார் .அதனால் இருவரும் அந்த கணவர் மற்றும் அவரின் நண்பர் ஆகியோர் மீது புகார் கூறினார்கள் .பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிந்து அவரின் கணவரையும் அவரது நண்பரையும் பிம்ப்ரி சின்ச்வாட் போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

“உடை மற்றும் போது உள்ளே வருவார் ,படமெடுத்து ஊரெல்லாம் விடுவார்” -கணவன் செஞ்ச களவாணித்தனம்