“என்னங்க ,இதையெல்லாம் வீடியோ எடுக்காதிங்க …”துடித்த மனைவி -ரசித்த கணவன்.

 

“என்னங்க ,இதையெல்லாம் வீடியோ எடுக்காதிங்க …”துடித்த மனைவி -ரசித்த கணவன்.

மனைவி தற்கொலை செய்து கொள்வதை ரசித்து வீடியோ எடுத்து அதை அந்த பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பிய ஒரு கணவனை போலீஸ் கைது செய்தது .

“என்னங்க ,இதையெல்லாம் வீடியோ எடுக்காதிங்க …”துடித்த மனைவி -ரசித்த கணவன்.


ஆந்திராவின் விஜயவாடா அருகில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் வசிக்கும் 38 வயதான பெஞ்சலையா என்பவர் செக்யுரிட்டியாக வேலை பார்த்து வந்தார் .அவர் தனது 31 வயதான மனைவி கொண்டம்மாவுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த கணவருக்கு அவரின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்து அவரை அடிக்கடி டார்ச்சர் செய்து வந்தார் .அதனால் இருவருக்கும் குடும்பத்தில் சண்டை வந்து கொண்டேயிருந்தது .அதனால் மனமுடைந்த அந்த பெண் கடந்த வாரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள கயிறோடு சென்றார் .அப்போது அந்த கணவன் அதை தடுக்காமல் தன்னுடைய செல்போன் கேமராவில் படம் பிடிக்க போனார் .அப்போது அந்த மனைவி இதையெல்லாம் வீடியோ எடுக்காதிங்க என்று கெஞ்சினார் .ஆனால் அந்தக் கணவன் அதை கேட்காமல் அந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்வதை ரசித்து ,அதை வீடியோவாக எடுத்தார் .
பிறகு அந்த மனைவி இறந்ததும் ,அந்த வீடியோவை அந்த கணவன் அவரின் பெற்றோருக்கு அனுப்பி வைத்தார் .அதை பார்த்து அதிச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் அந்த வீடியோவை அருகில் உள்ள காவல் நிலையத்தில் காண்பித்தார் .அதை பார்த்த போலீசார் அந்த செக்யூரிட்டியை கைது செய்ய அவரின் வீட்டிக்கு விரைந்து சென்றனர் .பிறகு போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து பெஞ்சலையாவை கைது செய்தனர்.